For Daily Alerts
Just In
சிவகாசி: பட்டாசு விபத்தில் ஒருவர் பலி
சிவகாசி:சிவகாசி அருகே இன்று காலை பட்டாசுத் தொழிற்சாலையில் நடந்த பயங்கர வெடிவிபத்தில் ஒருவர் பலியானார். 3 பேர் படுகாயமடைந்தனர்.
சிவகாசி அருகே உள்ள ஒரு பட்டாசுத் தொழிற்சாலையில் பட்டாசுகள் இருப்பு வைக்கப்பட்டிருந்த அறையில் இன்று காலை பயங்கர தீவிபத்து ஏற்பட்டது.
இதில் அந்த அறையில் உள்ள பட்டாசுகள் அனைத்தும் பலத்த சப்தத்துடன் வெடித்துச் சிதறின. இந்த விபத்தில் அந்த அறையில் இருந்த தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர்.
அவர்களில் சாமுவேல் என்கிற தொழிலாளற் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக இறந்தனர். 3 பேர் படுகாயமடைந்தனர்.
Comments
Story first published: Thursday, April 5, 2007, 5:30 [IST]