உ.பி. சட்டசபை-முதல் கட்ட தேர்தல்
Subscribe to Oneindia Tamil
லக்னோ:உத்தரப் பிரதேச மாநிலத்தில் 62 சட்டசபைத் தொகுதிகளுக்கு இன்று முதல் கட்ட வாக்குப் பதிவு நடந்தது.
உ.பி. மாநிலத்தில் மொத்தம் உள்ள 403 தொகுதகிளுக்கும் 7 கட்டமாக சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது. முதல் கட்டமாக இன்று 62 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வாக்குப் பதிவு இன்று காலை 7 மணிக்குத் தொடங்கியது.
தேர்தலையொட்டி உ.பி. முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
முலாயம் சிங் அரசின் தலைவிதியை நிர்ணயிக்கும் இந்தத் தேர்தல் பல்வேறு பரபரப்பான சூழல்களின் பின்னணியில் நடைபெறுகிறது. இந்தத் தேர்தலில் முலாயம் சிங்கின் சமாஜ்வாடிக் கட்சிக்கும், மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சிக்கும் இடையேதான் கடும் போட்டி நிலவுகிறது.
கடைசிக் கட்டத் தேர்தல் மே 8ம் தேதி நடைபெறுகிறது. மே 11ம் தேதி வாக்குகள் எண்ணப்படுகின்றன.












Click it and Unblock the Notifications