மக்கள் மீது தடியடி-இன்ஸ்பெக்டருக்கு தர்ம அடி

Subscribe to Oneindia Tamil

சென்னை:சாலை மறியல்வர்கள் மீது இன்ஸ்பெக்டர் தடியடி நடத்தியதால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் அந்த இன்ஸ்பெக்டரை சூழ்ந்து கொண்டு சரமாரியாக தர்ம அடி கொடுத்த நையப்புடைத்தனர்.

சென்னை திரிசூலம் பகுதியில் கல் குவாரிகள் நிறைய உள்ளன. அங்குள்ள கென்னடிவேலி என்ற பகுதியில் வசிக்கும் தாசன் என்பவர், அல்போன்ஸ் என்கிறவரிடம், கிரஷரை (கல் உடைக்கும் நிலையம்) மூடப் போகிறார்கள். நீங்கள் எல்லாம் உங்கள் ஊரைப் பார்க்க போக வேண்டியதுதான் என்று கூறி கேலியாகப் பேசியுள்ளார். ஜாதியைச் சொல்லியும் திட்டியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த அல்போன்ஸ் தன் தரப்பு ஆட்களிடம் போய் இதைச் சொல்லியுள்ளார். கொந்தளித்துப் போன 500 பேர் தாசன் வீடு முன்பு திரண்டனர். அவரது வீட்டின் மீது சரமாரியாக கற்களை வீசித் தாக்கினர்.

பின்னர் மூரவசம்பட்டு சாலையில் அமர்ந்து மறியல் செய்தனர். தகவல் அறிந்ததும் இன்ஸ்பெக்டர் கோதண்டராமன் தலைமையில் பழவந்தாங்கல் போலீஸார் விரைந்து வந்தனர்.

அனைவரையும் கலைந்து போகுமாறு கோதண்ராமன் கூறினார். ஆனால் யாரும் அசைவதாக இல்லை. இதையடுத்து போராட்டம் நடத்தியவர்கள் மீது கோதண்டராமன் திடீரென தடியடியில் இறங்கினார்.

இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் கோதண்டராமனை சுற்றிச் சூழ்ந்து கொண்டு சரமாரியாக அடிக்க ஆரம்பித்தனர். இதனால் வலி பொறுக்க முடியாமல் அலறினார் கோதண்டராமன்.

தகவல் அறிந்ததும் பரங்கமலை துணை ஆணையர் அருண் அங்கு விரைந்து வந்தார். பொதுமக்களின் பிடியிலிருந்து கோதண்டராமனை மீட்டார். பின்னர் போராட்டம் நடத்தியவர்களை சமாதானப்படுத்தி கலைந்து போகச் செய்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+