8ம் நூற்றாண்டு முருகன் கோவில் கண்டுபிடிப்பு
காஞ்சிபுரம்:மகாபலிபுரம் அருகே 1800 ஆண்டுகள் பழமை வாய்ந்த முருகன் கோவில் ஒன்று அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மகாபலிபுரம் அருகே உள்ள சலவன்குப்பம் என்ற இடத்தில் ஒன்றை ஆண்டுகளுக்கு முன்பு, கடலோரத்தில் ஒரு சிறிய பாறை கண்டுபிடிக்கப்பட்டது.
அங்கு ஏதாவது பழங்காலச் சின்னங்கள் மறைந்திருக்கக் கூடும் என்று யோசித்த இந்திய தொல்பொருள் ஆய்வுக் கழகத்தினர் அங்கு அகழ்வாராய்ச்சியில் இறங்கினர். இந்த ஆய்வின் விளைவாக பழமையான முருகன் கோவில் ஒன்று வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
கண்டுபிடிக்கப்பட்டுள்ள முருகன் கோவிலின் பல பகுதிகள் அழிந்து விட்டாலும் கூட கோவிலின் பல பகுதிகள் கிடைத்துள்ளன. இந்தக் கோவில் 1800 ஆண்டுகள் பழமையானவை.
இதுகுறித்து தொல்பொருள் ஆய்க் கழக கண்காணிப்பாளர் சத்யபாமா கூறுகையில், இந்தக் கோவில் முழுக்க முழுக்க சுண்ணாம்புக் கலவையாலும், செங்கலலாலும் உருவாக்கப்பட்டுள்ளது. இங்கு 13வது நூற்றாண்டு வரை வழிபாடுகள் நடத்தப்பட்டு வந்துள்ளதற்கான் சான்றுகள் கிடைத்துள்ளன.
சங்க கால காணப்பட்ட சிற்பங்கள், விளக்குகள், நந்தி, கலசம் போன்றவை இந்தக் கோவிலில் காணப்படுகிறது.
கோவிலில் பெரிய மகா மண்டபம் இருந்துள்ளது. இரண்டு கிணறுகளும் இருந்துள்ளன. மேலும் சுண்ணாம்புக் கல்லால் உருவாக்கப்பட் பெரிய பிரகாரமும் இருந்துள்ளது.
கோவிலில் காணப்படும் கல்வெட்டில், இக்கோவில் திருவிழிச்சூர் என்ற இடத்தில் கட்டப்பட்டதாகவும், எட்டாவது நூற்றாண்டில் இக்கோவில் கட்டப்பட்டதாகவுவம் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோவிலின் முன்புறம் அழகான வேலும் நிறுவப்பட்டுள்ளது. அந்த வேலும் இப்போது முழுமையாக கிடைத்துள்ளது.
வழக்கமாக மரம், செங்கல் உள்ளிட்ட பொருட்களால்தான் அந்தக் காலத்தில் கோவில்களைக் கட்டுவார்கள். ஆனால் முதல் முறையாக சுண்ணாம்புக் கற்களால் கட்டப்பட்ட கோவில் கிடைத்துள்ளது. அதேபோல களிமண்ணால் வடிவமைக்கப்பட்ட நந்தி சிலையும் பார்க்க வித்தியாசமாக உள்ளது என்றார் சத்யபாமா.
இந்தக் கோவில் குறித்து மேலும் ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.












Click it and Unblock the Notifications