விழுப்புரம் வெடிவிபத்து: 5 பேருக்கு வலைவீச்சு

Subscribe to Oneindia Tamil

திண்டிவனம்:விழுப்புரம் அருகே வெடிவிபத்தில் 16 பேர் கொல்லப்பட்ட சம்பவத்திற்குக் காரணமான 5 பேருக்கு போலீஸார் வலை வீசியுள்ளனர். இதுதொடர்பாக 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

விழுப்புரம் அருகே செண்டூரில் வெடிபொருட்கள் ஏற்றிச் சென்ற வாகனம் வெடித்துச் சிதறியதில் 16 பேர் கொல்லப்பட்னர். 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக, புதுவை மாநிலம் மணலிப்பேட்டையில் வெடிபொருள் விற்பனை நிலையத்தை வைத்துள்ள சேகர் உள்ளிட்ட 5 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

ஐந்து பேரையும் பிடிக்க நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. சேகர் புதுவையில் பதுங்கியிருப்பதாக வந்த தகவலைத் தொடர்ந்து போலீஸார் அங்கு விரைந்துள்ளனர்.

தென்னாலப்பாக்கத்தில் உள்ள சேகருக்குச் சொந்தமான வெடிபொருள் கிட்டங்கிக்கும் சீல் வைக்கப்பட்டுள்ளது.

முதல்வர் அவசர ஆலோசனை:

இதற்கிடையே, வெடிவிபத்து சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மறுவாழ்வு அளிப்பது தொடர்பான நடவடிக்கைகள் குறித்து முதல்வர் கருணாநிதி இன்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

இதில் தலைமைச் செயலாளர் திரிபாதி, டிஜிபி முகர்ஜி, உள்துறை, வருவாய், பொதுத்துறை செயலாளர்களும் இதில் கலந்து கொண்டனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+