கேரளாவிலிருந்து புலிகளுக்கு வெடிபொருள் சப்ளை
கல்பெட்டா:கேரள மாநிலம் மலப்புரம், வயநாடு, பாலக்காடு ஆகிய மாவட்டங்களில் உள்ள கல் குவாரிகளிலிருந்து ஏராளமான வெடிபொருட்கள் விடுதலைப் புலிகளுக்கு நீண்ட காலமாக சப்ளை செய்யப்பட்டு வருவதாக தமிழக கியூ பிரிவு போலீஸார் கண்டுபிடித்துள்ளனர்.
தமிழகத்திலிருந்து விடுதலைப் புலிகளுக்கு இரும்புக் குண்டுகள், வெடிபொருட்கள் கடத்தப்படுவது சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக 50க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் சிலர் இலங்கைத் தமிழர்கள் ஆவர்.
இந்த நிலையில், எங்கிருந்து புலிகளுக்கு வெடிபொருட்கள் சப்ளை ஆகிறது என்பதை கண்டறியும் முயற்சியில் தமிழக கியூ பிரிவு போலீஸார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
இதில் ஒரு குழுவினர் கேரள மாநிலத்திற்குச் சென்று அங்கு தீவிர விசாரணை நடத்தினர். இதில், மலப்புரம், பாலக்காடு, வயநாடு ஆகிய மாவட்டங்களில் உள்ள கல் குவாரிகளிலிருந்து பெருமளவிலான வெடிபொருட்கள் தமிழகத்திற்குக் கொண்டு வரப்பட்டு அங்கிருந்து இலங்கைக்குக் கடத்தப்படுவதாக தகவல் கிடைத்துள்ளது.
மலப்புரம், வயநாடு, பாலக்காடு மாவட்டங்களில் அதிக அளவில் கிரானைட் குவாரிகள் உள்ளன. இந்த குவாரிகளில் சிலவற்றின் உரிமையாளர்கள்தான் வெடிபொருட்களை தமிழகத்திற்கு அனுப்பி வருகின்றனர்.
விடுதலைப் புலிகளுக்கு மட்டுமல்லாது இந்தியாவில் உள்ள வேறு சில நக்சலைட் அமைப்புகளுக்கும் இங்கிருந்து வெடிபொருட்கள் செல்வதாக கூறப்படுகிறது.
தமிழக, கேரள எல்லையில் உள்ள கேரள ஊரான அம்பலவாயல் என்ற இடத்தில் உள்ள குவாரி உரிமையாளரின் வீட்டில் சில நாட்ளுக்கு முன்பு தமிழக போலீஸார் ரகசிய சோதனை நடத்தியுள்ளனர். ஆனால் அந்த உரிமையாளர் போலீஸ் பிடியிலிருந்து தப்பி விட்டார்.
கேரளாவிலிருந்தும் புலிகளுக்கு வெடிபொருட்கள் சப்ளை ஆவது தமிழக போலீஸாரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இதுதொடர்பாக கேரள போலீஸாருடன் இணைந்து தீவிர விசாரணை நடத்த தமிழக கியூ பிரிவு போலீஸார் திட்டமிட்டுள்ளனர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications