ராமேஸ்வரம்: படகு கவிழ்ந்து 4 அகதிகள் பலி
ராமேஸ்வரம்:இலங்கையில் இருந்து தமிழகத்திற்கு படகு மூலம் வந்து கொண்டிருந்த அகதிகளின் படகு நடுக்கடலில் கவிழந்ததில் நான்கு அகதிகள் உயிரிழந்தனர்.
இலங்கையில் ராணுவத்திற்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையே நடந்து வரும் சண்டையினால் ஏரளமான இலங்கை தமிழர்கள் அங்கிருந்து படகு மூலம் தமிழகத்திற்கு அகதிகளாக வந்து கொண்டு இருக்கிறார்கள்.
இந் நிலையில் நேற்று இலங்கை தலைமன்னார் பகுதியில் இருந்து அகதிகள் பரதன் (25), பாத்திமா (20), நந்தினி (24), சாந்தி (21), மயூரான் (17) ஆகிய 5 பேரும் ஒரு படகில் ராமேஸ்வரத்திற்கு வந்து கொண்டிருந்தனர். படகை இலங்கை படகோட்டி ஒருவர் ஓட்டி வந்தார்.
இவர்களது படகு நடுக்கடலில் வந்து கொண்டிருந்த போது திடீரென கடல் கொந்தளிப்பு ஏற்பட்டது. இதனால் படகு கடலில் கவிழ்ந்தது.இதில் படகில் இருந்த நந்தினி, சாந்தி, மயூரான் மற்றும் படகோட்டி ஆகிய 4 நான்கு பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 2 பேர் நீந்தி ராமேஸ்வரம் கடற்கரைக்கு வந்து சேர்ந்தனர்.