எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு ராஜ்யசபா எம்பி பதவி
டெல்லி:பிரபல விவசாய விஞ்ஞானியும் நாட்டில் பசுமைப் புரட்சிக்கு வித்திட்டவருமான டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதன் மற்றும் பரத நாட்டிய கலைஞரும் வரலாற்று ஆராய்ச்சியாளருமான கபிலா வாத்ஸ்யனும் ராஜ்யசபா எம்பிக்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கான உத்தரவை ஜனாதிபதி அப்துல் கலாம் வெளியிட்டார்.
1925ல் கும்பகோணத்தில் பிறந்த சுவாமிநாதன் கோவை வேளாண்மை கல்லூரியில் பயின்றவர். பின்னர் கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் ஜீன் தொழில்நுட்பத்தில் டாக்டர் பட்டம் பெற்றார்.
இதையடுத்து நாடு திரும்பிய சுவாமிநாதன் நாட்டின் உயர் ரக விதைகளை அறிமுகப்படுத்தி விவசாய புரட்சிக்கு வித்திட்டார். உணவு உற்பத்தியில் நாடு தன்னிறைவு பெற முக்கிய காரணமாக திகழ்ந்தவர் சுவாமிநாதன்.
மத்திய திட்டக் குழு துணைத் தலைவராகவும் இருந்துள்ளார். பத்ம விருதுகள் வென்றவர். ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் விருது, மகசேசே விருது உள்பட உலகம் முழுவதும் பல விருதுகளை ெவன்றவர்.
சென்னை தரமணியில் எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி மையத்ைத நிறுவி பல இளம் விஞ்ஞானிகளை உருவாக்கி வருகிறார்.












Click it and Unblock the Notifications