நியூசிலாந்திடம் வீழ்ந்தது தெ.ஆப்பிரிக்கா
ஜார்ஜ்டவுன்:தென் ஆப்பிரிக்காவை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி நியூசிலாந்து அணி அரையிறுதிக்கு முன்னேறிவிட்டது.
உலககோப்பை கிரிக்கெட் போட்டியின் சூப்பர் 8 சுற்றின் நேற்றைய ஆட்டத்தில் நியூசிலாந்தும், தென் ஆப்பிரிக்காவும் மோதின. இதில் டாஸ் வென்ற நியூலாந்து தென் ஆப்பிரிக்காவை முதலில் பேட்டிங் செய்ய அழைத்தது.
தென் ஆப்பிரிக்கா அணி தொடக்க ஆட்டகாரராக களமிறங்கிய ஸ்மித் 1 ரன் எடுத்து வெளியேறினர். மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான டிவில்லியர்ஸ் ரன் எதுவும் எடுக்காமல், காலீஸ் 22 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
இதனால் தென் ஆப்பிரிக்கா எடுக்க திணறியது. பின்னர் கிப்ஸ் சிறப்பாக ஆடி 60 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். இறுதியில் தென் ஆப்பிரிக்கா அணி 50 ஒவர்களில் 7 விக்கெட்டை இழந்து 193 ரன் மட்டுமே எடுத்தது.
எளிதான வெற்றி இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி தொடக்கத்தில் டெய்லர் 10 ரன்னில் வெளியேறினார்.
இதன் பின் அந்த அணியின் கேப்டன் பிளம்மிங்கும், ஸ்டைரீஸ்சும் சிறப்பாக விளையாடினர். பிளம்மிங் 50 ரன் எடுத்து ஆட்டமிழந்தார்.
இவரை அடுத்து களமிறங்கிய ஒரம் 10 ரன்னில் ஆட்டமிழந்தார். சிறப்பாக விளையாடிய ஸ்டைரீஸ் 56 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
இறுதியில் நியூசிலாந்து அணி 5 விக்கெட் மட்டும் இழந்து 48.2 ஒவர்களில் 196 ரன் எடுத்து அபார வெற்றி பெற்றது.
இந்த வெற்றி மூலம் நியூசிலாந்து அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றது.












Click it and Unblock the Notifications