சர்வாதிகாரி இன்சமாம்-வாசிம் விளாசல்
Subscribe to Oneindia Tamil
டெல்லி:உலகக் கோப்பை பாகிஸ்தான் கேப்டன் இன்சமாம் ஒரு சர்வாதிகாரியை போல் நடந்துக் கொண்டதாக முன்னாள் வீரர் வாசிம் அக்ரம் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து தனியார் தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில்,
![]() |
இன்சமாம் மிகுந்த அதிகாரத்துடன் சர்வாதிகாரி போல் நடந்துக் கொண்டார்.
கிரிக்கெட் வாரியத்தின் அதிகாரி ஒருவர் அவரது உத்திரவிற்காக அவருடைய வீட்டிலேயே உட்கார்ந்திருந்ததை பார்த்துள்ளேன்.
![]() |
இவ்வாறு இருப்பது கிரிக்கெட்டிற்கு நல்லதல்ல. அணியின் கேப்டன், சக வீரர்களிடம் நம்பிக்கையாக நடந்துக் கொள்ளவேண்டும். அதிகாரத்தை கேட்டு பெறக் கூடாது. அணி வெற்றியடைந்தால் அதெல்லாம் தானாகவே கிடைக்கும்.
சோயிப் மாலிக்கும், முகமது யூனுஸ் கானும் கேப்டன் பதவிக்கு பொருத்தமானவர்கள். அதில் சோயிப் கான் இந்த பதவியை ஏற்க மறுத்துவிட்டார்.
மாலிக் இளம் வீரராக இருந்தாலும் திறமையானவர். அதனால் அவரை கேப்டனாக நியமிக்க வேண்டும் என்றார் வாசிம்.














Click it and Unblock the Notifications