ராமர் பாலமே கிடையாது: டி.ஆர்.பாலு
ராமநாதபுரம்:ராமர் பாலம் என்பதே முழுக்க முழுக்க கட்டுக்கதை தான். மன்னார் வளைகுடா மனிதனால் உருவாக்கப்பட்ட பாலம் ஏதுமில்லை என மத்திய கப்பல் மற்றும் நெடுஞ்சாலை போக்குவரத்துத் துறை அமைச்சர் டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார்.
சேது சமுத்திர திட்ட பணிகளை நேரில் பார்வையிட்ட அவர் பின்னர் நிருபர்களிடம் கூறுகையில்,
இத் திட்டத்தில் இதுவரை 13.1 மில்லியன் கன அடி அகழ்வுப் பணி முடிந்துள்ளது. ஆதாம் பகுதியில் இப்போது அகழ்வுப் பணி நடந்து வருகிறது.
இந்த பகுதியில் சுற்று சூழல் பாதிக்கப்படுமா என 2,424 முறை பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டுள்ளோம். கடலுக்கு அடியிலும் 2,003 மீட்டர் ஆழத்திற்கு பல இடங்களில் ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டுள்ளது.
ராமர் பாலம் என்பதே இது முழுக்க முழுக்க கட்டுக்கதை தான். இந்தப் பகுதியில் மனிதனால் உருவாக்கப்பட்ட பாலம் ஏதுமில்லை என்பதை பல ஆய்வுகள் நிரூபித்துவிட்டன.
உத்தரப் பிரதேசத்தில் தேர்தல் நடப்பதால் அரசியல் நோக்கத்தில், ஓட்டு வாங்குவதற்காக இந்த பிரச்சனையை பாஜக இப்போது கிளப்புகிறது.
பாஜக ஆட்சியின் போது வகுத்த திட்டத்தின்படிதான் இந்த சேது சமுத்திர திட்ட பணிகள் நடந்து வருகிறது என்பதை நினைவூட்ட விரும்புகிறன்.
ஆதாம் பாலம் (ராமர் பாலம்) கடல்-நில மாற்றங்களால் ஏற்பட்டது என மன்னார் வளைகுடா பராமர் பாலம்ஆய்வுகள் தெரவித்துவிட்டன.
இந்தப் பணி திட்டமிட்டபடி 2008ம் வருடத்திற்குள் முடிக்கப்படும் என்றார் பாலு.












Click it and Unblock the Notifications