Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பந்த்: தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை:பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 சதவீத இட ஒதுக்கீடுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்தை கண்டித்து தமிழகத்தில் நடந்த பந்த்க்கு அரசு பதில் அளிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் மசோதவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்து தீர்ப்பு வழங்கியது. இதனைக் கண்டித்து கடந்த மாதம் தமிழகம் முழுவதும் ஒருநாள் பந்த் நடைபெற்றது.

பந்துக்கு திமுக கூட்டணி அழைப்பு விடுத்தது.

பந்துக்கு தடை விதிக்க கோரி சென்னை டிராபிக் ராமசாமி, சிவகுமார் ஆகியோர் பொது நல வழங்கு தொடர்ந்தனர். ஆனால் இந்த வழக்கை நீதிபதி முகோபத்யா முன்பு விசாரணைக்கு வந்த போது பந்துக்கு தடை விதிக்க முடியாது என நீதிபதி அறிவித்தார்.

இதையடுத்து இந்த மனு இன்று காலை நீதிபதிகள் தர்மாராவ், பழனிவேல் முன்னிலையில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது பந்து நடந்து முடிந்து விட்டது. எனவே இந்த மனு செயல் இழந்ததாகி விடுகிறது என நீதிபதிகள் கூறினார்கள்.

அதற்கு டிராபிக் ராமசாமி வாதாடும் போது அரசியில் கட்சிகள் பந்த் நடத்தக் கூடாது என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. இந்த பந்த் மூலம் ரூ. 750 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே இந்த மனு மீது விசாரணை நடத்தினால் எதிர்காலத்தில் பந்த் நடத்தாமல் இருக்க விதி ஏற்படும் என கூறினார்.

இதை ஏற்ற நீதிபதிகள் இன்னும் 2 வாரத்துக்குள் பதில் மனு தாக்கல் செய்யுமாறு அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+