மலிங்கா காயம்-ஆஸி.யுடனான போட்டியில் ஓய்வு
கிரெனடா: ஆஸ்திரேலியாவுக்கும், இலங்கைக்கும் இடையே இன்று நடைபெறும் உலகக் கோப்பைப் போட்டியின் சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் இலங்கை வேகப்பந்து வீச்சாளர் மலிங்கா ஆட மாட்டார் எனத் தெரிகிறது.
உலககோப்பை சூப்பர் 8 சுற்றின் இன்றைய போட்டியில் முன்னாள் சாம்பியன் இலங்கையும், நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவும் மோதவுள்ளன. யாராலும் வெல்ல முடியாத அணியாக ஆஸ்திரேலியா அட்டகாசமான நிலையில் உள்ளது. இலங்கையும் கடும் போட்டியைக் கொடுத்து வரும் அணியாக உள்ளது.
சூப்பர் 8 சுற்றில் முதல் இடத்தில் ஆஸ்திரேலியாவும், இரண்டாம் இடத்தில் நியூசிலாந்தும், மூன்றாவது இடத்தில் இலங்கை அணியும் உள்ளது. இந்த மூன்று அணிகளும் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்று விட்டன.
இந்நிலையில் இன்று ஆஸ்திரேலியாவும், இலக்கையும் மோதுகிறது. இதில் உலககோப்பை தொடரில் தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான ஆட்டத்தில் தொடர்ச்சியாக 4 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்த இலங்கை வேகப்பந்து வீச்சாளர் மலிங்கா விளையாட மாட்டார் என அந்த அணியின் பயிற்சியாளர் டாம் மூடி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மூடி கூறுகையில், வியாழக்கிழமை நியூசிலாந்துக்கு எதிராக நடந்த போட்டியில் மலிங்காவுக்கு இட கணுக்காலில் காயம் ஏற்பட்டது. இதனால் அவர் இன்றைய போட்டியில் விளையாடுவாரா என்பது போட்டி தொடங்கும் முன்பு தான் தெரியும் என அவர் கூறினார்.
நடப்பு உலகக் கோப்பைப் போட்டியில் அதிக விக்கெட்டுக்களை வீழ்த்திய வீரராக மலிங்கா திகழ்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications