இடஒதுக்கீடு தடை நீக்க கோரி மத்திய அரசு மனு
Subscribe to Oneindia Tamil
டெல்லி:பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் சட்டத்துக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளதை நீக்கக் கோரி மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் இன்று மனு தாக்கல் செய்தது.
மத்திய அரசின் உயர் கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் மத்திய அரசின் சட்டத்துக்கு சமீபத்தில் உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது.
இதையடுத்து இந்தத் தீர்ப்பை எதிர்த்து மறு ஆய்வு மனுவைத் தாக்கல் செய்ய மத்திய அரசு முடிவு செய்தது. இதுதொடர்பான மனுவை இன்று பிற்பகல் மத்திய அரசு தாக்கல் செய்தது.
இந்த மனுவை அவசரம் கருதி விரைவாக விசாரிக்க வேண்டும் என மத்திய அரசு தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் அதை ஏற்க உச்சநீதிமன்றம் மறுத்து விட்டது.












Click it and Unblock the Notifications