சு.சுவாமியை சந்திக்க மறுத்த கருணாநிதி
சென்னை:ராமர் பாலத்துக்கு சேதமில்லாமல் சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்றுவது குறித்து கருணாநிதியிடம் பேச முயன்ற போது என்னை சந்திக்க அவர் மறுத்துவிட்டார் என ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியம் சுவாமி குற்றம் சாட்டியுள்ளார்.
இது குறித்து சுவாமி கூறுகையில்,
இந்தியாவிற்கு பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் சேது சமுத்திர திட்டத்தை எதிர்க்கவில்லை. ராமர் பாலத்தை சேதப்படுவதை தான் எதிர்க்கிறோம்.
ராமர் பாலம் கி.பி.1480 வரை நடைப்பாதையாக உபயோகத்தில் இருந்ததாக பழைய ஆவணங்களில் குறிப்பு உள்ளது.
இந்த சேது சமுத்திர திட்டத்தை தனுஷ்கோடி வழியாக மாற்றி அமைத்து நிறைவேற்றினால் ரூ.600 கோடியை மிச்சப்படுத்தலாம். இதுகுறித்து ஆதாரங்களுடன் முதல்வர் கருணாநிதியை சந்திக்க முயன்ற அவர் மறுத்துவிட்டார்.
ஆனால் எனது கடிதத்திற்கு அவர் 2 மணி நேரத்தில் பதில் அளித்தது மகிழ்ச்சியை தந்தது.
அந்த பதில் கடிதத்தில் ராமர் பாலத்தை கற்பனை என அவர் கூறியிருப்பது மனதுக்கு வேதனை அளிப்பதோடு இந்து கலாசாரத்தின் மீது கருணாநிதி கொண்டுள்ள காழ்ப்புணர்ச்சியை காட்டுகிறது என்றார் சுவாமி.
சுவாமிக்கு கருணாநிதி அனுப்பியுள்ள பதில் கடிதத்தில், ராமர் பாலம் என்பதே ஒரு கற்பனைக் கதை தான். அதை வைத்துக் கொண்டு தமிழகத்துக்கு, தமிழர்களுக்கு நலம் பயக்கும் ஒரு திட்டத்தை எதிர்ப்பது சரியல்ல என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications