1500 அடி பள்ளத்தில் 4 நாள் உயிர் போராட்டம்
கொடைக்கானல்:கொடைக்கானல் மலையில் 1500 பள்ளத்தில் விழுந்த வாலிபர் 4 நாட்ளாக வெறும் ஊற்றுத் தண்ணீரை மட்டுமே குடித்து உயிர் வாழ்ந்து பத்திரமாக மீண்டுள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலைச் சேர்ந்தவர் ஆரோக்கியதாஸ். கொத்தனாராக வேலை பார்த்து வருகிறார். கடந்த 11ம் தேதி தற்கொலைப் பாறை அருகே உள்ள கால்ப் கிளப்புக்கு வேலைக்காக சென்றார். அப்போது கால் தடுமாறி மலைப் பள்ளத்தில் விழுந்தார்.
அவர் விழுந்த மலைப் பகுதி 1500 அடி ஆழமுடைய பள்ளமாகும். புன்னகை மன்னன் படத்தில் தற்கொலைக்கு முயன்று மரக் கிளையில் சிக்கி உயிர் தப்பிய கமல்ஹாசனைப் போல ஒரு மரக்கிளையில் சிக்கித் தப்பித்தார் ஆரோக்கியதாஸ்.
2 நாட்களாக இப்படி மரக் கிளையில் தொக்கியபடி இருந்துள்ளார் ஆரோக்கியதாஸ். பின்னர் மயக்கமடைந்து, கீழே விழுந்தார். காப்பாற்றுமாறு கோரி உரக்கக் குரல் எழுப்பினார். ஆனால் யாருக்கும் அந்த குரல் எட்டவில்லை. இப்படியாக கடந்த நான்கு நாட்களாக பள்ளத்தில் பரிதவித்தபடி இருந்தார் ஆரோக்கிய தாஸ்.
இந்த நான்கு நாட்களும் அவர் மலைப் பள்ளத்தில் வந்த ஊற்று நீரைக் குடித்து உயிரைக் கையில் பிடித்துக் கிடந்தார். இந்த சமயத்தில் அப்பகுதி வழியாக ஒருவர் வந்துள்ளார். அரை மயக்கமாக கிடந்த ஆரோக்கிய தாஸைப் பார்த்த அவர் சத்தம் போட்டு ஆட்களைக் கூப்பிட்டுள்ளார்.
பின்னர் தீயணைப்பு படையினருக்குத் தகவல் போய் அவர்கள் விரைந்து வந்து ஆரோக்கிய தாஸை மீட்டனர். பின்னர் மருத்துவமனையில் முதலுதவி கொடுத்த பின்னர் மதுரை அரசு மருத்துவமனைக்கு ஆரோக்கியதாஸ் அனுப்பி வைக்கப்பட்டார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications