ரயில் விபத்து: பலியானோர் குடும்பங்களுக்குநிதியுதவி-வாரிசுகளுக்கு அரசு வேலை
சென்னை:காஞ்சிபுரம் மாவட்டம் கோவிந்தவாடி அகரம் என்ற இடத்தில், வேன் மீது ரயில் மோதியதில் இறந்த 11 பேரின் குடும்பங்களுக்கும் மத்திய, மாநில அரசுகள் இழப்பீடு வழங்குவதாக அறிவித்துள்ளன. இறந்தவர்களின் வாரிசுகளுக்கு அரசு வேலையில் முன்னுரிமை வழங்கப்படும் என முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார்.
தமிழக அரசின் சார்பில் விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 1 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய ரயில்வே அமைச்சகம் தலா ரூ. 50 ஆயிரம் இழப்பீடு வழங்கப்படும் என அறிவித்துள்ளது.
இறந்தவர்களில் 9 பேர் கிராம நிர்வாக அலுவலர்கள் என்பதால் அவர்களுக்கு இறந்த பின்னர் கிடைக்கும் குடும்ப நல நிதியாக ரூ. 1 லட்சம் வழங்கப்படும். எனவே கிராம நிர்வாக அலுவலர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 2.50 லட்சம் இழப்பீடும், மற்ற இருவரது குடும்பங்களுக்கு தலா ரூ. 1.50 லட்சமும் இழப்பீடாக கிடைக்கும்.
இதற்கிடையே, விபத்தில் இறந்தவர்களின் வாரிசுகளுக்கு அரசு வேலையில் முன்னுரிமை வழங்கப்படும் என்று முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், விபத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு சிறப்பான முறையில் சிகிச்சை அளிக்குமாறும் அவர் உத்தரவிட்டுள்ளார்.
-
ADMK Candidate list: 167 தொகுதிகளுக்கான அதிமுக வேட்பாளர்கள் யார் யார்? முழு பட்டியல்! -
தென் தமிழகத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பாதை.. இடி, மின்னலுடன் கொட்டப்போகும் மழை! உஷார் மக்களே! -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
தவெக வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் LIVE: 234 தொகுதிகளில் 23 பெண்களுக்கு மட்டுமே வாய்ப்பு அளித்த விஜய் -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
விஜய்க்கு எதிராக பெரம்பூர், திருச்சியில் கிழக்கில்.. களமிறங்கும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் யார்? -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
அரசியலன்னா இதுதான்.. எப்போ என்ன நடக்கும்னே தெரியாது.. ஸ்டாலின் டிக் அடித்த பெயர்.. பலர் ஷாக் -
இதுவரை திமுக ஜெயிக்காத.. கோவை தெற்கு தொகுதியைத் கேட்டு வாங்கிய செந்தில் பாலாஜி.. என்ன காரணம்? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
ஜெயலலிதா ஸ்டைலை பின்பற்றும் விஜய்! ‘டபுள் தொகுதி’ ஃபார்முலாவை கையில் எடுத்தது ஏன்? இதுவரை யார் யார்?












Click it and Unblock the Notifications