லெவல்கிராங்சிங் பணியாளர்கள் நியமிக்கப்படவேண்டும் கருணாநிதி
சென்னை:நாடு முழுவதும் ஆளில்லாத லெவல் கிராசிங்களை நிர்வகிக்க உடனடியாக பணியாளர்களை நியமிக்க வேண்டும் என ரயில்வே அமைச்சர் லல்லு பிரசாத் யாதவுக்கு முதல்வர் கருணாநிதி கோரிக்கை விடுத்துள்ளார்.
நேற்று காஞ்சிபுரத்தில் நடந்த ரயில்-மின் பஸ் மோதலில் கிராம நிர்வாக அதிகாரிகள் 11 பேர் இறந்தது குறித்து அதிமுக, பாமக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் இன்று சட்டசபையில் கேள்வி எழுப்பின.
இதற்கு பதிலளித்த கருணாநிதி, ரயில்வே துறை ரூ.12,000 கோடி லாபம் ஈட்டியுள்ளது. இதில் ஒரு ரூ.5,000யையாவது ஒதுக்கி ஆளில்லாத லெவல் கிராசிங்குகளில் பணியாளர்களை நியமிக்க வேண்டும்.
காஞ்சிபுரத்தில் நடந்தது விபத்து பெரும் வருத்தம் தருகிறது. இது போல் விபத்துகளை முழுவதுமாக தவிர்க்க இயலாது. லெவல் கிராங்சிங்குகளில் பணியாளர்கள் நியமிக்கப்பட்டால் 80 சதவீத விபத்துகளையாவது தடுக்கலாம்.
கட்சிகளின் பொதுக் கூட்டத்திற்கோ அல்லது பேரணி போன்ற நிகழ்ச்சிகளுக்கு வாகனங்களில் செல்லும் தொண்டர்கள் எச்சரிக்கையுடன் செயல்படும்படி கட்சி தலைவர்கள் வலியுறுத்த வேண்டும் என்றார் கருணாநிதி.












Click it and Unblock the Notifications