மேட்டூர் அணையில் குதித்து 4 பேர் தற்கொலை

Subscribe to Oneindia Tamil

மேட்டூர்:மேட்டூர் அணையிலிருந்து குதித்து, லாரி அதிபர் தனது மனைவி, 2 குழந்தைகளுடன் தற்கொலை செய்து கொண்டார்.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ள கொல்லப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சங்கர். ரிக் லாரி வைத்து தொழில் நடத்தி வந்தார். இவரது மனைவி சுந்தரி. இவர்களுக்கு கலைச்செல்வன் என்ற 11 வயது மகனும், மதுஸ்ரீ எனற 6 வயது மகளும் உள்ளனர்.

2 நாட்களுக்கு முன்பு குடும்பத்தோடு மோட்டார் சைக்கிளில் மேட்டூர் அணைக்கு வந்தார் சங்கர். பின்னர் குளிர்பானத்தில் அனைவரும் எலி விஷத்தை கலந்து சாப்பிடுள்ளனர்.

பின்னர் அணையிலிருந்து ஆழமான பகுதியில் குதித்து நான்கு பேரும் தற்கொலை செய்து கொண்டனர்.

நேற்று அவர்களின் உடல்கள் மிதக்க ஆரம்பித்தன. இதையடுத்து போலீஸார் விரைந்து வந்து நான்கு உடல்களையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தனது மோட்டார் சைக்கிளில் உள்ள பெட்டியில் சங்கர் எழுதி வைத்திருந்த கடிதத்தை போலீஸார் கண்டுபிடித்தனர். அதில், ரிக் தொழிலில் எனது நண்பர் ரூ. 10 லட்சம் பணத்தை மோசடி செய்து விட்டார்.

இதையடுத்து நான் எனது மாமியாரின் உதவியுடன் புதிதாக ஒரு ரிக் வண்டி வாங்கினேன். ஆனால் அதையும் இயக்க விடாமல் எனது நண்பர் இடையூறு செய்து வந்தார், தினசரி மிரட்டியும் வந்தார்.

அவரது தொல்லை தாங்க முடியாமல்தான் நாங்கள் தற்கொலை செய்து கொண்டோம். அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் என எழுதியுள்ளார் சங்கர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+