வீடுகளில் புகுந்து சிலிண்டர் திருடிய 3 பேரைமரத்தில் கட்டி வைத்து வெளுத்த பொதுமக்கள்
பல்லடம்:கோவை மாவட்டம் பல்லடம் அருகே வீடுகளில் புகுந்து காஸ் சிலிண்டர்களைத் திருடிய 3 பேர் கும்பலை பொதுமக்கள் சுற்றி வளைத்து மரத்தில் கட்டி வைத்து சரமாரியாக அடித்து உதைத்து போலீஸில் ஒப்படைத்தனர்.
பல்லடம் அருகே உள்ள பல கிராமங்களில் வீடுகளில் காஸ் சிலிண்டர்கள் அடிக்கடி திருடு போய் வந்தன. இதுதொடர்பாக போலீஸில் புகார்கள் குவிந்தன.
இந்த நிலையில் நேற்று இரவு சிற்றம்பலம் என்ற கிராமத்தில் 3 பேர் ஒரு வீட்டில் புகுந்து காஸ் சிலிண்டரைத் திருடுவதை சிலர் பார்த்து விட்டனர். உடனியாக ஊரைக் கூட்டிய அவர்கள் சிலிண்டர் திருடர்களை வளைத்துப் பிடித்தனர்.
பின்னர் அங்கிருந்த மரத்தில் கட்டி வைத்து சரமாரியாக அடித்து உதைத்தனர். பின்னர் இன்று காலை போலீஸாரிடம் அவர்களை ஒப்படைத்தனர். 3 பேரும் பொங்கலூரைச் சேர்ந்தவர்கள் என்பது விசாரணையில் தெரிய வந்தது. இவர்களுடன் மேலும் 4 பேர் உள்ளனராம்.
இந்தக் கும்பல் பல்லடம் சுற்றுப் பகுதிகளில் கிட்டத்தட்ட 120க்கும் மேற்பட்ட சிலிண்டர்களைத் திருடி கள்ளச் சந்தையில் அதிக விலைக்கு அவற்றை விற்று வந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications