மதுரை மேற்கு பெருமளவில் போலி வாக்காளர்கள்தேர்தல் ஆணையம் டென்ஷன்-சரி பார்க்க உத்தரவு
சென்னை:இடைத் தேர்தலுக்காக காத்திருக்கும் மதுரை மேற்கு தொகுதியில் பெருமளவில் போலி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. வாக்காளர் பட்டியலை மீண்டும் சரி பார்த்து போலிகளை நீக்க உத்தரவிட்டிருப்பதாக தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ்குப்தா கூறியுள்ளார்.
மதுரை மேற்குத் தொகுதியில் இடைத் தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளது. இதற்கான முன்னோட்ட நடவடிக்கையாக அங்கு வாக்காளர் பட்டியல் திருத்தப்படுகிறது.
புதிதாக வாக்காளர்கள் சேர்க்கலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இதில் 15 ஆயிரம் புதிய விண்ணப்பங்கள் வந்தன. ஆனால் இந்த எண்ணிக்கை அதிகமாக இருப்பதைப் பார்த்து குழம்பிய தேர்தல் ஆணையம் அந்த விண்ணப்பங்களைப் பரிசீலித்தது.
அப்போதுதான் அவை அனைத்துமே போலியானவை என்பது தெரிய வந்தது. மேலும், இதில் உள்ளவர்கள் தங்களது முந்தைய முகவரிகளை அளிக்கவில்லை. எனவே இந்த 15 ஆயிரம் பேரும் வேறு பெயர்களில் ஏற்கனவே வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
இதையடுத்து பெருமளவில் சேர்க்கப்பட்டுள்ள இந்த போலி வாக்காளர்களைக் கண்டறிந்து நீக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications