நீதிமன்றம் கட்ட நிலம் தந்தவரை அலைகழித்தஅரசு-வட்டியுடன் நிவாரணம் தர உத்தரவு
சென்னை:மதுரை உயர்நீதிமன்றக் கிளை அமைப்பதற்கு நிலம் கொடுத்தவருக்கு அவருக்கான நிவாரணத் தொகையுடன் வட்டியும் சேர்த்து ரூ. 36.59 லட்சம் நிவராணத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மதுரை உலகநேரியில் சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை அமைந்துள்ளது. இது அமைந்துள்ள நிலம் மதுரை ஜெய்ஹிந்துபுரத்தைச் சேர்ந்த சம்சுதீன் என்பவருக்குச் சொந்தமானதாகும்.
உயர்நீதிமன்றக் கிளை கட்டடம் கட்டுவதற்காக சம்சுதினுக்குச் சொந்தமான நிலத்தில் 3 ஹெக்டேர் நிலத்தை அரசு கையகப்படுத்தியது. ஆனால் அதற்குரிய விலையை சம்சுதினுக்கு அரசு கொடுக்கவில்லை. இதனால் அவர் மதுரை விரைவு நீதிமன்றத்தை கடந்த 2004ம் ஆண்டு டிசம்பர் மாதம் அணுகினார்.
அதை விசாரித்த நீதிமன்றம், சம்சுதினுக்கு வழங்கப்பட்ட நிலத்துக்கான விலையை அதிகரித்து உத்தரவிட்டது. ஆனால் அந்தத் தொகையை அரசு வழங்கவில்லை.
இதையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் சம்சுதீன் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், சம்சுதீனுக்கு வழங்க வேண்டிய தொகையுடன் வட்டியையும் சேர்த்து ரூ. 36.59 லட்சம் பணத்தை அரசு 3 மாத காலத்திற்குள் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது.
-
மார்ச் 31 ஆம் தேதி தான் கடைசி நாள் : உடனே சொத்து வரி செலுத்த சென்னை மாநகராட்சி அறிவுறுத்தல்! -
தமிழகத்தின் பொறுப்பு ஆளுநரானார் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்! ஸ்டாலின் பங்கேற்பு -
சென்னையின் காஸ்ட்லி ப்ரொஜெக்ட்.. அண்ணா சாலை மேம்பாலம்.. சைதாப்பேட்டை - சிஐடி நகர் பணிகள் ஓவர் -
தனியே தன்னந்தனியே.. தனிமரமாய் தமிழ்நாட்டை விட்டுப் போன ஆர்என் ரவி! யாருமே கண்டுக்கலையே! பரபர சீன்! -
IPL 2026: ஐபிஎல் 2026 கால அட்டவணை வெளியீடு.. சென்னை மேட்ச் எப்போது? தேதி வாரியாக முழு லிஸ்ட்! -
Gold Rate Today: தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 உயர்வு.. ஒரு சவரன் ரூ.1,20,960க்கு விற்பனை! -
கொரோனா லாக்-டவுன் மாதிரி ஆயிடுச்சு.. இட்லியில் கை வைத்த இஸ்ரேல்! சிலிண்டர் சிக்கல் எப்போது தீரும்? -
LPG: தமிழகத்தில் 20 நாட்களுக்கு தேவையான எல்பிஜி சிலிண்டர் இருப்பு! மத்திய அரசுக்கு கடிதம் -
“நவோதயா பள்ளிகளை தமிழகத்தில் அனுமதிக்க முடியாது.. அது இல்லாமலோயே கல்வி சிறப்பாக உள்ளது” - தமிழக அரசு -
இது கோடைக்காலம் இல்லை.. கோடை மழைக்காலம்! ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
28 நாட்கள் கழித்துதான் கேஸ் சிலிண்டர் வருமா? இதென்ன கணக்கு! இட்லி, தோசைக்கு தமிழகத்தில் டிமாண்டு? -
கேஸ் தட்டுப்பாடு இல்லை என சொல்லும் அரசு.. நீதிமன்ற வளாகத்திலேயே சிலிண்டர் காலியானதால் கேன்டீன் மூடல்












Click it and Unblock the Notifications