For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மீண்டும் பிராமணர் சங்க தலைவரானார் நாராயணன்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:பிராமணர் சங்க தலைவராக தற்போதைய தலைவர் நாராயணன் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

Narayanan

இதுகுறித்து பிராமணர் சங்க தேர்தலை நடத்திய தேர்தல் அதிகாரி ஜெகந்நாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தமிழ்நாடு பிராமணர் சங்க மாநிலத் தலைவர் தேர்தல் கடந்த 15ம் தேதி நடைபெற்றது. இதில் மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் தங்களது வாக்குகளை, அந்தந்த மாவட்ட தலைநகரங்களில் ரகசிய வாக்கெடுப்பாக பதிவு செய்தனர்.

பதிவு செய்யப்பட்ட வாக்குகளும், ஏனைய ஆவணங்களும் துணைத் தேர்தல் அதிகாரிகளால் மதுரைக்கு கொண்டு வரப்பட்டு வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டது.

இதில் தற்போதைய பிராணர் சங்க தலைவராக இருக்கும் திருவொற்றியூர் நாராயணன் வெற்றி பெற்றுள்ளார். இவர் இப்பதவியில் இன்னும் 3 ஆண்டுகள் பதவி வகிப்பார் என அதில் கூறப்பட்டுள்ளது

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X