இலங்கை-ஆளில்லா உளவு விமானம் நொறுங்கியது
Subscribe to Oneindia Tamil
கொழும்பு:இலங்கை விமானப் படையின் ஆள் இல்லா உளவு விமானம் ஒன்று இலங்கையின் கிழக்கில் கடலில் விழுந்து நொறுங்கியது.
இதுகுறித்து விமானப்படை குரூப் கேப்டன் அஜந்தா சில்வா கூறுகையில், விமானப்படையின் ஆள் இல்லாத உளவு விமானம் கொக்கலை மற்றும் புலமோடை ஆகிய பகுதிகளுக்கு இடையே கடல் பகுதியில் பறந்து ெகாண்டிருந்தது.
அப்போது தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டு விமானம் கடலில் விழுந்து நொறுங்கியது. விமானத்தின் என்ஜினைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் கடற் படையினர் ஈடுபட்டுள்ளனர் என்றார்.
கடந்த 1997ம் ஆண்டு முதல் இதுவரை 3 ஆள் இல்லாத உளவு விமானங்களை இலங்கை விமானப்படை இழந்துள்ளது. தற்ேபாது நொறுங்கியது நான்காவது விமானம் ஆகும்.












Click it and Unblock the Notifications