ஜெயா டிவியை முடக்க முயன்றால்...சு.சுவாமி
சென்னை:ஜெயா டிவியை முடக்க முயலும் நடவடிக்கையை திமுக கைவிடாவிட்டால், திமுகவுக்கு எதிராக நாடு தழுவிய அளவில் பிரசார இயக்கம் நடத்தப்படும் என ஜனதாக் கட்சித் தலைவர் சுப்பிரமணியம் சுவாமி கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், ஜெயா டிவியை முடக்கி, அதை சன் டிவியின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து அதை கைப்பற்றும் முயற்சியில் மறைமுக சதி வேலையில் திமுக ஈடுபட்டுள்ளதாக ஜெயலலிதா கூறியிருப்பது உண்மையானதே.
மத்தியில் ஐக்கிய முற்ேபாக்குக் கூட்டணி ஆட்சி வந்ததிலிருந்தே சட்டவிரோத சன் டிவி ஆதிக்கவாதிகள், கேபிள் டிவி ஆபரேட்டர்களை மிரட்டியும், விளம்பரதாரர்களை வளைத்தும் போட்டி சேனல்களை ஒடுக்கி வருகின்றனர்.
எதிர்க்கட்சிகளின் கருத்தை வெளிபப்டுத்தும் ஒரே தொைலக்காட்சி ஜெயா டிவி மட்டுமே. அதன் பங்குதாரருக்கு பிரச்சினை கொடுப்பது என்பது ஜெயா டிவி மீதான மறைமுகத் தாக்குதல் ஆகும்.
இதை பத்திரிக்கை சுதந்திரத்தின் மீதான நேரடி தாக்குதலாகவே அனைத்து ஜனநாயக சக்திகளும் கருத வேண்டும். இந்த நடவடிக்கைகளை திமுக தொடர்ந்தால், அதன் சதி வேலைகளை வெளிச்சமிட்டுக் காட்டும் வகையில் நாடு தழுவிய பிரசார இயக்கம் நடத்தப்படும் என்று கூறியுள்ளார் சுவாமி.
இதற்கிடையே, ஜெயா டிவியை முடக்க திமுக சதி செய்வதாக ஜெயலலிதா அளித்த பேட்டியை துண்டுப் பிரசுரங்களாக அச்சடித்து அதிமுகவினர் விநிேயாகித்து வருகின்றனர். மேலும் தமிழகத்தின் பல பகுதிகளிலும் போஸ்டர்களும் அடித்து ஒட்டி வருகின்றனர்.