புதுவையில் தீ: 2 பேர் பலி-ரூ.1 கோடி நாசம்
புதுச்சேரி:புதுவையில் இன்று ஏற்பட்ட தீ விபத்தில் 2 பேர் பலியாகினர். ரூ.1 கோடி மதிப்புள்ள பொருட்கள் சேதமடைந்தன.
புதுச்சேரி உப்பளம் பகுதியில் பல தோட்டங்கள் உள்ளன. இதில் நூற்றுகணக்கான வீடுகளில் ஏராளமான தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர்.
இங்கு பிரான்ஸ்வா தோட்டத்தில் திடீரென ஒரு வீட்டில் தீப்பிடித்தது இந்த தீ வேகமாக பரவி அக்கம்பக்கத்து வீடுகளும் எரிய ஆரம்பித்தன. இந்த வெப்பத்தால் வீடுகளுக்குள் இருந்த கேஸ் சிலிண்டர்கள் வெடித்து சிதறின.
இதனால் அருகிலிருந்த உடையார் தோட்டம் பகுதியிலும் தீ பரவியது. 10க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
இதில் 400க்கும் மேற்பட்ட குடிசைகள் எரிந்து சாம்பலாகிவிட்டன. இச்சம்பவத்தில் முன்னாள் ராணுவ வீரர் உள்பட 2 பேர் பலியாயினர். சுமார் ரூ.1 கோடி மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சாம்பலாகின.
தீ விபத்து நடந்த பகுதியை முதல்வர் ரங்கசாமியும் பார்வையிட்டார்.












Click it and Unblock the Notifications