காங்.பேச்சு-மதிமுக கோபம்-சட்டசபையில் அமளி
சென்னை:விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு தரும் மதிமுகவைத் தடை செய்ய வேண்டும் என்று சட்டசபையில் காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியதால் சபையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.
சட்டசபையில் நெடுஞ்சாலைத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு காங்கிரஸ் உறுப்பினர் அருள் அன்பரசு பேசுகையில், தமிழக மண்ணில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டார். அவரைக் கொன்றது விடுதலைப் புலிகள்.
அப்படி இருந்தும் சில கட்சிகள், சில அமைப்புகள் விடுதலைப் புலிகளை பகிரங்கமாக ஆதரித்து வருகின்றன.
சமீபத்தில் செந்தூர் கிராமத்தில் குண்டு வெடித்து 17 பேர் கொல்லப்பட்டனர். அதேபோல, தமிழகத்தின் பல பகுதிகளிலும் பெருமளவில் ஆயுதங்களும், வெடிபொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. இவையெல்லாம் விடுதலைப் புலிகளுக்காக கடத்தப்பட்டவையாகும்.
இந்த நடவடிக்கைகளை பார்க்கும்போது தமிழகத்தில், தேசவிரோத சக்திகள் தலை தூக்க ஆரம்பித்து விட்டதோ என்ற சந்தேகம் எழுகிறது.
ராஜீவ் காந்தி என்ற துடிப்பான ஒரு தலைவரை நாம் இழந்து விட்டோம். ரோஜாவின் ராஜாவாக திகழ்ந்த அவரை தீவிரவாத செயலுக்குப் பலி கொடுத்து விட்டோம்.
எனவே விடுதலைப் புலிகளுக்கு பகிரங்கமாகவும், மறைமுகமாகவும் ஆதரவு தரும் மதிமுக போன்ற கட்சிகள் மற்றும் அமைப்புகள் மீது தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுத்து தடை செய்ய வேண்டும் என்றார்.
இதைக் கேட்டதும் மதிமுக எம்.எல்.ஏக்கள் எழுந்து அருள் அன்பரசுவின் பேச்சுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அவரது பேச்சை அவைக் குறிப்பிலிருந்து நீக்க வேண்டும் என்று கோரினர்.
ஆனால் அதைக் கண்டுகொள்ளாத அருள் அன்பரசு தொடர்ந்து பேசினார். அப்போது சபாநாயகர் இருக்கையில் இருந்த துணை சபாநாயகர் வி.பி.துரைசாமி, அருள் அன்பரசுவின் பேச்சை ஆராய்ந்து தனது தீர்ப்பை பின்னர் தெரிவிப்பதாக கூறினார்.
பின்னர் சபாநாயகர் ஆவுடையப்பன் இருக்கைக்குத் திரும்பினார். அப்போது மதிமுக உறுப்பினர் கம்பம் ராமகிருஷ்ணன் எழுந்து சென்று சபாநாயகரிடம் அருள் அன்பரசுவின் பேச்சு குறித்து தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து அருள் அன்பரசுவின் பேச்சிலிருந்து சில பகுதிகள் அவைக் குறிப்பிலிருந்து நீக்கப்படுவதாக சபாநாயகர் அறிவித்தார். அத்தோடு பிரச்சினை முடிவுக்கு வந்தது.
-
மதிமுக + கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி வேட்பாளர்கள் அறிவிப்பு.. 6 தொகுதிகளுக்கு வெளியான லிஸ்ட் -
காங்கிரஸ் கை வசம் வந்த ஈரோடு கிழக்கு! ஈவிகேஎஸ் இளங்கோவன் பேத்தி சமன்னா போட்டியா? -
குறைந்த தொகுதிகளை வாங்கிவிட்டு அடிச்சிக்கிறாங்க.. தமிழக காங். நிர்வாகிகளை விமர்சித்த பிரவீன் சக்கரவர்த்தி -
திமுக ஏஜெண்ட் செல்வப் பெருந்தகை.. காங்கிரஸில் வெடித்த கலகம்! டெல்லிக்கு டிக்கெட் போடும் கதர் தலைகள்! -
எழும்பூர்.. திமுகவின் இரும்புக்கோட்டை.. தவெக ராஜ்மோகனுக்கு ‘டெபாசிட்’ கிடைப்பதே சவால்.. ஏன்? -
ரூ.4000 + ரூ.2000.. தவெக விஜய் சட்டென சொன்ன சர்ப்ரைஸ் வாக்குறுதி.. யாருக்கெல்லாம் வழங்கப்படும்? -
காங்கிரஸ் VS பாஜக.. தமிழகத்தில் எந்தெந்த தொகுதிகளில் ‘கை' - ‘தாமரை' நேரடி மோதல்.. வெல்வது யாரு? -
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி












Click it and Unblock the Notifications