ஒரு ஏட்டு-ரெண்டு பொண்டாட்டி: போலீஸ் குடியிருப்பில் அடிதடி
சென்னை:தலைமைக் காவலரின் இரு மனைவிகளும் போலீஸ் குடியிருப்பில் கட்டிப்புரண்டு சண்டை போட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து ஒரு மனைவி, அவரது மகள் உள்பட 4 பேரை போலீஸார் கைது செய்தனர்.
சென்னை லஞ்ச ஒழிப்புக் காவல்துறையில் தலைமைக் காவலராக பணியாற்றுபவர் மாசிலாமணி. இவருக்கு சரஸ்வதி(38), சாந்தி(35) என இரு மனைவிகள்.
சரஸ்வதியை மகன், மகளுடன் மண்ணடி போலீஸ் குடியிருப்பில் குடி வைத்திருந்தார். சாந்தியை மகன், மகளுடன் குரோம்பேட்டை போலீஸ் குடியிருப்பில் குடி வைத்திருந்தார்.
தனது கணவருக்கு சரஸ்வதி என்ற இன்னொரு மனைவி இருப்பது நீண்ட காலமாக சாந்திக்குத் தெரியாதாம். சமீபத்தில்தான் அது தெரிய வந்தது. இதையடுத்து சரஸ்வதியின் வீடு தேடி வந்து தகராறு செய்துள்ளார் சாந்தி.
இந்த சண்டையால் போலீஸ் குடியிருப்பே நாறிப் போனதாம். இதையடுத்து சரஸ்வதியை வீட்டைக் காலி செய்யும்படி உயர் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இந்த நிலையில், சரஸ்வதி ஊருக்குச் சென்றிருந்தார். அப்போது மாசிலாமணி, சரஸ்வதியின் வீட்டைக் காலி செய்து விட்டு பொருட்களை சாந்தி வீட்டில் கொண்டு வந்து போட்டுள்ளார்.
ஊருக்குத் திரும்பிய சரஸ்வதி வீடு காலி செய்யப்பட்டதை அறிந்து அதிர்ந்தார். குரோம்பேட்டைக்கு வந்த சரஸ்வதி, அங்கு சாந்தியுடன் சண்டையில் குதித்தார்.
இருவரும் கட்டிப் புரண்டு போலீஸ் குடியிருப்பில் பலமாக சண்டை போட்டுள்ளனர். இதனால் போலீஸ் குடியிருப்பே அங்கு திரண்டு விட்டது.
தகவல் அறிந்து விரைந்து வந்த போலீஸார், சரஸ்வதி, அவரது மகள் திவ்யா, சரஸ்வதியின் தங்கை பரமேஸ்வரி, ஆட்டோ டிரைவர் பிரபு ஆகியோரைக் கைது செய்தனர்.
-
எல்பிஜி கேஸ் சிலிண்டர் தமிழகத்தில் பதிய 25 நாள்களா? எரியாத ஸ்டவ்கள்.. மதுரை வெங்கடேசன் உடைத்த உண்மை -
செஸ் உலகில்.. மிகப்பெரிய சாதனை செய்த தமிழக சிறுவன்! 9 வயசுல இதை செய்யுறது பெரிய விஷயம்! -
வெயிலுக்கு குட்டி பிரேக்.. ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! இன்னைக்கு மழைக்கு வாய்ப்பு -
EXCLUSIVE: வட இந்தியர்களுக்கு வேலையில்லை.. இனி இட்லி, சப்பாத்தி மட்டும் தான்! குமுறும் ஓட்டல் உரிமையாளர்கள்.! -
LPG Gas Cylinder Shortage LIVE: நாளை முதல் இட்லி, தோசை கிடைக்காது.. சென்னை ஹோட்டல்கள் சங்கம் -
உஷரய்யா உஷாரு.. பீகாரை வைத்து தமிழ்நாட்டில் பாஜக போடும் கணக்கு! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
LPG: தமிழகத்தில் 20 நாட்களுக்கு தேவையான எல்பிஜி சிலிண்டர் இருப்பு! மத்திய அரசுக்கு கடிதம் -
தமிழ்நாட்டில் சட்டசபை தேர்தல் எப்போது? பரபர களம்.. கோதாவில் குதிக்க ரெடியான கட்சிகள்! லீக்கான தேதி! -
தமிழக அரசு ஊழியர்களின்.. ஓய்வு பெறும் வயதை 60-லிருந்து 62 ஆக உயர்த்த திட்டம்! ஸ்டாலின் மாஸ்டர்பிளான் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி












Click it and Unblock the Notifications