Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஒரு ஏட்டு-ரெண்டு பொண்டாட்டி: போலீஸ் குடியிருப்பில் அடிதடி

Subscribe to Oneindia Tamil

சென்னை:தலைமைக் காவலரின் இரு மனைவிகளும் போலீஸ் குடியிருப்பில் கட்டிப்புரண்டு சண்டை போட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து ஒரு மனைவி, அவரது மகள் உள்பட 4 பேரை போலீஸார் கைது செய்தனர்.

சென்னை லஞ்ச ஒழிப்புக் காவல்துறையில் தலைமைக் காவலராக பணியாற்றுபவர் மாசிலாமணி. இவருக்கு சரஸ்வதி(38), சாந்தி(35) என இரு மனைவிகள்.

சரஸ்வதியை மகன், மகளுடன் மண்ணடி போலீஸ் குடியிருப்பில் குடி வைத்திருந்தார். சாந்தியை மகன், மகளுடன் குரோம்பேட்டை போலீஸ் குடியிருப்பில் குடி வைத்திருந்தார்.

தனது கணவருக்கு சரஸ்வதி என்ற இன்னொரு மனைவி இருப்பது நீண்ட காலமாக சாந்திக்குத் தெரியாதாம். சமீபத்தில்தான் அது தெரிய வந்தது. இதையடுத்து சரஸ்வதியின் வீடு தேடி வந்து தகராறு செய்துள்ளார் சாந்தி.

இந்த சண்டையால் போலீஸ் குடியிருப்பே நாறிப் போனதாம். இதையடுத்து சரஸ்வதியை வீட்டைக் காலி செய்யும்படி உயர் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இந்த நிலையில், சரஸ்வதி ஊருக்குச் சென்றிருந்தார். அப்போது மாசிலாமணி, சரஸ்வதியின் வீட்டைக் காலி செய்து விட்டு பொருட்களை சாந்தி வீட்டில் கொண்டு வந்து போட்டுள்ளார்.

ஊருக்குத் திரும்பிய சரஸ்வதி வீடு காலி செய்யப்பட்டதை அறிந்து அதிர்ந்தார். குரோம்பேட்டைக்கு வந்த சரஸ்வதி, அங்கு சாந்தியுடன் சண்டையில் குதித்தார்.

இருவரும் கட்டிப் புரண்டு போலீஸ் குடியிருப்பில் பலமாக சண்டை போட்டுள்ளனர். இதனால் போலீஸ் குடியிருப்பே அங்கு திரண்டு விட்டது.

தகவல் அறிந்து விரைந்து வந்த போலீஸார், சரஸ்வதி, அவரது மகள் திவ்யா, சரஸ்வதியின் தங்கை பரமேஸ்வரி, ஆட்டோ டிரைவர் பிரபு ஆகியோரைக் கைது செய்தனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+