மண்டபம் கடலில் கரை ஒதுங்கியதுகப்பல் சிக்னல் குண்டு - கருணாநிதி
சென்னை: மண்டபம் கடல் பகுதியில் கரை ஒதுங்கியது பயங்கர வெடிகுண்டு அல்ல. வழக்கமாக கப்பல்களில் பயன்படுத்தப்படும் சிக்னல் குண்டுகள்தான் என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
சட்டசபையில் இன்று காவல்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்திற்குப் பதிலளித்து கருணாநிதி பேசுகையில், மண்டபம் அகதிகள் முகாமுக்கு அருகே கடலோரத்தில் ஒரு பார்சலில் 5 குண்டுகள் கண்டெடுக்கப்பட்டன.
இவற்றை மதுரையிலிருந்து சென்ற வெடிகுண்டு நிபுணர்கள் பரிசோதித்தனர். சோதனையின்போது, ஒரு குண்டு மேலே சென்று ஒளி வீசியபடி பாராசூட் போல கீழே இறங்கி வந்தது.
எனவே இவை வெடிகுண்டுகள் அல்ல. கப்பலில் சிக்னலுக்காக பயன்படுத்தப்படும் ஒளி உமிழும் தன்மை கொண்ட குண்டுகள் என கண்டறியப்பட்டது.
இது சிகப்பு வர்ணத்தில் இருந்ததால் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இருந்தாலும் கடலோர பகுதிகளில் பாதுகாப்பு பலத்தப்பட்டுள்ளது என்றார்.












Click it and Unblock the Notifications