விடுதலைப் புலிகளின் டிவி, ரேடியோ முடக்கம்
கொழும்பு:விடுதலைப் புலிகளின் தொலைக்காட்சி மற்றும் வானொலி ஒலி, ஒளி பரப்பை அமெரிக்காவின் இன்டல்சாட் செயற்கைக்கோள் நிறுவனம் முடக்கிவிட்டது.
படை பலத்துடன் திகழும் விடுதலைப் புலிகள் தங்களுக்கென வானொலி மற்றும் தொலைக்காட்சி ஒளிபரப்பையும் வைத்துள்ளனர். இவற்றின் மூலம் ஈழம் குறித்த செய்திகளையும், போர் குறித்த செய்திகளையும் ஒலி, ஒளிபரப்பி வந்தனர்.
ஆண்டுதோறும் மாவீரர் தினத்தின்போது பிரபாகரன் உரையாற்றுவதை நேரடியாகவும் ஒலி, ஒளிபரப்பி வந்தனர்.
அமெரிக்காவின் இன்டல்சாட் செயற்கைக்கோள் நிறுவனத்தின் செயற்கைக்கோள் மூலமாக இந்த ஒளி, ஒலிபரப்பு நடந்து வந்தது. இவற்றை முடக்க வேண்டும் என இலங்கை அரசு அமெரிக்க அரசைக் கோரி வந்தது.
அதை ஏற்று தடை செயய்ப்பட்ட அமைப்பாக புலிகள் இயக்கம் உள்ளதால், இன்டல்சாட் செயற்கைக்கோளை அவர்கள் பயன்படுத்தக் கூடாது என்று அமெரிக்க அரசு எச்சரித்தது.
இதையடுத்து இன்டல்சாட் செயற்கைக்கோளிலிருந்து சிக்னல் வழங்குவதை அந்த நிறுவனம் நிறுத்தி விட்டது.
இதனால், புலிகளின் வானொலி மற்றும் தொலைக்காட்சி ஒலி, ஒளிபரப்பு பாதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது.