விமான நிலையத்தில் ரூ. 40 லட்சம்பணத்துடன் பிடிபட்டு தப்பிய தொழிலதிபர்
Subscribe to Oneindia Tamil
சென்னை:டெல்லியில் இருந்து விமானத்தில் சென்னை வந்த ரியல் எஸ்டேட் அதிபரிடமிருந்து ரூ.40 லட்சத்தை வருமான வரித்துறையினர் பறிமுதல் செய்தனர். ஆனால், அவர் அதற்குரிய கணக்கை காட்டியதால் விடுவிக்கப்பட்டார்.
சென்னை கே.கே.நகரை சேர்ந்த ரியல் எஸ்டேட் தொழிலதிபரான சுந்தரராமன், நேற்றிரவு டெல்லியிலிருந்து சென்னைக்கு விமானத்தில் வந்தார்.
டெல்லியில் அவரது பெட்டிகளை சோதனையிட்டபோது அதில் ஏகப்பட்ட பணம் இருந்தது.
இதையடுத்து டெல்லி அதிகாரிகள் சென்னை வருமான வரித்துறையினரை அலர்ட் செய்தனர்.
இதையடுத்து வருமான வரித்துறையினர் சென்னை வந்திறங்கிய சுந்தரராமனின் பெட்டியை சோதனையிட்டு அதிலிருந்த ரூ. 40 லட்சத்தை பறிமுதல் செய்தனர்.
ஆனால், அவர் அந்தப் பணத்துக்கு உரிய கணக்கை காட்டினார். இதையடுத்து ரூ.40 லட்சம் பணத்தை ரிலீஸ் செய்த அதிகாரிகள் அவரையும் போக அனுமதித்தனர்.












Click it and Unblock the Notifications