ஊட்டியில் ஜெ.-ஒரு வாரம் ஓய்வு
Subscribe to Oneindia Tamil
ஊட்டி:அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா ஊட்டிக்கு வந்துள்ளார். ஒரு வாரம் இங்கு தங்கியிருந்து ஓய்வெடுக்கிறார்.
நேற்று காலை சென்னையிலிருந்து விமானம் மூலம் ஜெயலலிதா கோவை வந்தார். அவருடன் சசிகலாவும் உடன் சென்றார். தன்னை வழியனுப்ப அதிமுகவினர் யாரும் வர வேண்டாம் என ஜெயலலிதா கூறியதால் அதிமுகவினர் யாரும் வழியனுப்ப செல்லவில்லை.
கோவை சென்ற ஜெயலலிதா அங்கிருந்து கார் மூலம் கோத்தகிரி அருகே உள்ள கொடநாடு எஸ்டேடுக்குச் சென்றார். அங்கு அவர் ஒரு வாரம் தங்கி ஓய்வெடுக்கவுள்ளார்.
வழக்கமாக ஹைதராபாத்துக்குச் சென்று தனது திராட்சை தோட்டத்தில்தான் ஓய்வெடுப்பார் ஜெயலலிதா. ஆனால் அந்த எஸ்டேட் உள்ள இடம் தலித்துகளுக்கு அரசு வழங்கிய இடத்தை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டுள்ளதாக ஆந்திர அரசு வழக்கு தொடர்ந்துள்ளது. எனவே அந்த எஸ்டேட்டுக்கு ஜெயலலிதா இம்முறை செல்லவில்லை.












Click it and Unblock the Notifications