மீனாட்சி திருக்கல்யாணம்: மதுரையில் கோலாகலம்
மதுரை:மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் இன்று காலை விமரிசையாக நடந்தேறியது.
மதுரையில் சித்திரைத் திருவிழா வழக்கமான உற்சாகத்துடன் நடந்து வருகிறது. இன்று காலை மீனாட்சி கல்யாணம் வெகு விமரிசையாக நடந்தது.
கோவில் வளாகத்தில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் கல்யாண நிழ்ச்சிகள் நடந்தன. முதலில் பிரியாவிடையுடன் சுந்தரேஸ்வரர் எழுந்தருளினார். பின்னர் 22 வேத விற்பன்னர்கள் முன்னிலையில் கல்யாண நிகழ்ச்சிகள் நடந்தன.
பெண்ணை தாரை வார்க்கும் நிகழ்ச்சி நடந்தைதத் தொடர்ந்து அம்மனுக்கு தங்கத் தாலி அணிவிக்கப்பட்டது. பிறகு அம்மி மிதித்து அருந்ததி பார்க்கும் நிகழ்ச்சியும் நடந்தது.
திருக்கல்யாணத்தை ஆயிரக்கணக்கான பக்தர்கள் நேரில் கண்டு மீனாட்சி அம்மனையும், சுந்தரேஸ்வரரையும் தரிசித்தனர். அம்மனுக்கு தாலி அணிவிக்கப்பட்ட அதே நேரத்தில், சுமங்கலிகள் தங்களது தாலிக் கயிற்றை மாற்றிப் புதிய கயிறு அணிந்து கொண்டனர்.
திருக்கல்யாணத்தையொட்டி பலத்த பாதுகாப்பு மேற்கொள்ளப்பட்டிருந்தது.












Click it and Unblock the Notifications