இங்கிலாந்தில் நிலநடுக்கம்-மக்கள் ஓட்டம்
Subscribe to Oneindia Tamil
லண்டன்: இங்கிலாந்தின் தென் பகுதியில் ஏற்பட்ட லேசான நில நடுக்கத்தால் மக்கள் பீதியடைந்து வீடுகளை விட்டு ஓடினர்.
இங்கிலாந்தின் தென் பகுதியில் உள்ள கென்ட், ஸ்டான்போர்டு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 4.3 என பதிவானது.
இந்த நிலநடுக்கத்தில் வீடுகள் குலுங்கின. சில கட்டிடங்களில் விரிசல் ஏற்பட்டது. நில நடுக்கத்தைத் தொடர்ந்து மக்கள் பீதியடைந்து வீடுகளை விட்டு வெளியேறினர்.
வீட்டின் மேற்கூரை இடிந்து ஒரு பெண் காயமடைந்தார். ஆனால் உயிரிழப்பு ஏதும் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல பெரிய அளவில் சேதமும் ஏற்படவில்லை.












Click it and Unblock the Notifications