கருணாநிதியை பார்த்து பரிதாப்படுகிறேன்: ஜெ
சென்னை:கருணாநிதிக்கு அரசியல் நாகரீகம் பற்றி பேச என்ன தகுதி இருக்கிறது என அதிமுக பொதுசெயலாளர் ஜெயலலிதா கேட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
எனக்கு அரசியல் நாகரீகம் தெரியவில்லை என கருணாநிதி கூறுகிறார்.
இதே தமிழக சட்டசபையில் மறைந்த எம்ஜிஆர் முதலமைச்சராக இருந்த காலத்தில், கருணாநிதியின் தூண்டுதலின் பேரில், அவர் மீது செருப்பு வீசப்பட்டது.
என்னையும் சட்டமன்றத்தில் அவமானப்படுத்தினார்கள். அப்படிப்பட்டவருக்கு அரசியல் நாகரீகம், பண்பாடு குறித்து பேச என்ன தகுதி இருக்கிறது?
தனக்கு சட்டமன்ற பொன்விழா வேண்டாம் என கூறுவது போல் நாடகமாடுகிறார் கருணாநிதி. இதுகுறித்து நான் பொறாமை கொள்வதாக கூறியுள்ளார்.
நாங்கள் அதைப்பற்றி பொறாமை படவில்லை, பரிதாபப்படுகிறோம், 38 வருடத்திற்கும் 50 வருடத்திற்கும் அவருக்கு வித்தியாசம் தெரியவில்லை.
தன் கட்சியின் சொந்த பணத்தில் இதுபோன்ற விழாக்களை நடத்த வேண்டுமே தவிர பொது மக்களின் பணத்தில் அல்ல என குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications