சூதாட்ட களமாகும் மனமகிழ் மன்றங்கள்
Subscribe to Oneindia Tamil
சென்னை:சென்னையில் மனமகிழ் மன்றங்கள் என்ற சூதாட்டத்தில் ஈடுபட்ட 54 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
சென்னையில் மனமகிழ் மன்றங்கள் என்ற பெயரில் பல இடங்களில் பொழுது போக்கு மன்றங்கள் ஆரம்பிக்கப்பட்டு வருகிறது.
இதில் கேரம்போர்டு போன்ற விளையாட்டுகள் விளையாடப்பட்டு வருகின்றன.ஆனால் சில மனமகிழ் மன்றங்களில் அனுமதிக்கப்பட்ட நேரங்களை மீறி சூதாட்டம் நடைபெற்ற வருவதாக போலீஸாருக்கு தகவல் வந்தது.
இதனையடுத்து போலீஸார் சோதனை மேற்கொண்டதில் 17 மன்றங்களில் சூதாட்டம் நடைபெறுவது தெரியவந்தது. இவர்கள் வழக்கு பதிவு செய்து சூதாட்டம் நடத்தியவர்கள், விளையாடிவர்கள் உள்பட 54 பேரை போலீஸார் கைது செய்தனர்.
இதனால் சென்னையிலுள்ள மனமகிழ் மன்றங்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications