8ஐ இழுத்துக் கொண்டு ஓடிய 11!

Subscribe to Oneindia Tamil

சென்னை8ம் வகுப்பு படித்து வரும் மாணவியை 11ம் வகுப்பு படிக்கும் மாணவன் ஏமாற்றி இழுத்துக் கொண்டு ஓடி விட்டதாக போலீஸில் புகார் கூறப்பட்டுள்ளது.

சென்னை பெரம்பூர் திருவிக நகரைச் சேர்ந்தவர் ரவி. இவரது மகள் ஸ்ரீமதி. 8ம் வகுப்பு படித்து வருகிறார், வயது 14. ரவி சில மாதங்களுக்கு முன்பு இறந்து விட்டார். தாயார் சாந்தி, மாமா விஜயக்குமாருடன் வசித்து வருகிறார் ஸ்ரீமதி.

இதே பகுதியைச் சேர்ந்தவர் விஜயராகவன். 17 வயதாகும் இவர் 11ம் வகுப்பு படித்து வருகிறார். அடிக்கடி பாடத்தில் சந்தேகம் என்று கூறி ஸ்ரீமதி வீட்டுக்கு வருவாராம் விஜயராகவன்.

சிறு வயதினர்தானே என்று குடும்பத்தினர் சந்தேகிக்கவில்லை. இதைப் பயன்படுத்திக் கொண்டு இருவரும் காதல் புரிந்துள்ளனர்.

இந்த நிலையில், 2 நாட்களுக்கு முன்பு இருவரும் வீட்டை விட்டுப் போய் விட்டனர். விஜயராகவன்தான் ஸ்ரீமதியின் மனதைக் கெடுத்து இழுத்துக் கொண்டு போய் விட்டதாக விஜயக்குமார் போலீஸில் புகார் கொடுத்துள்ளார்.

காணாமல் போய் விட்ட இருவரையும் போலீஸார் தேடி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+