கோவை குண்டுவெடிப்பு வழக்கு தீர்ப்பு எப்போது?
கோவை:கோவை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் தீர்ப்பு எப்போது வழங்கப்படும் என்பதை வருகிற 31ம் தேதி அறிவிப்பதாக தனி நீதிமன்ற நீதிபதி தெரிவித்துள்ளார்.
கோவை நகரில் கடந்த 1998ம் ஆண்டு பிப்ரவரி 14ம் தேதி தொடர் குண்டுவெடிப்புச் சம்பவம் நடந்தது. இதில் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இந்த வழக்கில் அல் உம்மா தலைவர் பாஷா, கேரள மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவர் அப்துல் நாசர் மதானி உள்ளிட்ட 160க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது கோவை சிறை வளாகத்திற்குள் அமைக்கப்பட்ட சிறப்பு நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுப் பதிவு செய்யப்பட்டு, குற்றப்பத்திரிக்கையும் தாக்கல் செய்யப்பட்டது.
கடந்த மாதம் இந்த வழக்கில் விசாரணை முடிவடைந்தது. தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் காவல் நீட்டிப்புக்காக சிறப்பு நீதிமன்றத்திற்குக் கொண்டு வரப்பட்டனர்.
அப்போது தங்களுக்கு தீர்ப்பு எப்போது வழங்கப்படும் என்பதை தயவு செய்து அறிவிக்குமாறு நீதிபதி உத்திராபதியை வேண்டிக் கொண்டனர். அதற்குப் பதிலளித்த நீதிபதி, வருகிற 31ம் தேதியன்று, தீர்ப்பு எப்போது வழங்கப்படும் என்பதை அறிவிப்பதாக தெரிவித்தார்.
-
கூட்டுறவு வங்கிகளில் 1200 கோடி.. நெகிழ வைத்த கோவை மக்கள்.. அசாத்தியமான அற்புதமான சம்பவம் -
கோவை வந்த மோடியை வரவேற்க அண்ணாமலை வராதது ஏன்? புது காரணம் சொன்ன நயினார் நாகேந்திரன் -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
இன்று முதல் புதிய வருமான வரி விதிகள் அமல்! சம்பளதாரர்கள் கவனிக்க வேண்டிய 'டாப் 10' மாற்றங்கள்! -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
BJP Candidate List: தமிழக பாஜக வேட்பாளர்கள் யார்? இன்று வெளியீடு! அண்ணாமலை பெயர் இருக்காதா? -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
அரசு ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்..டபுள் ஆன ஊதியம்! அதிரடியாக வெளியான ஆர்டர்! யார் யாருக்கு? எவ்வளவு? -
Toll Charge: தமிழகத்தில் இன்று நள்ளிரவு முதல் சுங்கக் கட்டணம் உயர்வு! பொதுமக்கள் அதிர்ச்சி! -
கிராவல் மண் குவாரி முறைகேடு.. தமிழக அரசுக்கு 1,000 கோடி வருவாய் இழப்பு.. லாரி உரிமையாளர்கள் -
இந்தியா முழுக்க பேசுபொருளான கோவை பஸ்.. கர்நாடகாவில் உண்மையில் என்ன நடந்தது.. போலீசார் வார்னிங் -
கோவையில் 2 ஆயிரம் அரசு ஊழியர்கள் எடுத்த முடிவு.. மாவட்ட கலெக்டருக்கு மிகப்பெரிய ட்விஸ்ட்











Click it and Unblock the Notifications