For Daily Alerts
Just In
சிட்னி ரயிலில் வெடி குண்டு புரளி-பீதி
சிட்னி:ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரின் ரயிலில் இரு வாலிபர்கள் பட்டாசுகளை கொளுத்தி வெடிக்கச் செய்தனர். இதையடுத்து தீவிரவாதிகள் ரயிலில் குண்டு வைத்து தாக்குதல் நடத்தியதாக தகவல் பரவியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
செயிண்ட் லியோனார்ட்ஸ், வுல்ஸ்டோன்கிராப் ஆகிய இடங்களுக்கு இடையே ஓடும் ரயிலில் குண்டு வெடித்துவிட்டதாக போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசி அழைப்புகள் வந்து குவித்தன. இதையடுத்து தீவிரவாதத் தடுப்பு போலீசார் களத்தில் இறங்கினர். ஆனால், விசாரணையில் அது பட்டாசு எனத் தெரியவந்தது.
வெடி வைத்த வாலிபர்கள் ரயில் நிலையத்தின் கேமராவில் பதிவாகியுள்ளனர். அவர்களைத் தேடும் பணி நடக்கிறது.
Comments
Story first published: Thursday, May 3, 2007, 5:30 [IST]