சிபிஐயிடம் போகிறது போலி எண்கவுன்டர் விவகாரம்: சிக்கலில் நரேந்திர மோடி
டெல்லி:குஜராத் போலி எண்கவுண்டர்கள் தொடர்பான வழக்கை சிபிஐ விசாரிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டுள்ளது.
மதக் கலவரத்தை தூண்டிவிட்டு அதில் அரசியல் குளிர் காயும் நரேந்திர மோடி தலைமையிலான குஜராத் பாஜக அரசு இப்போது பெரும் சிக்கலில் மாட்டியுள்ளது.
தீவிரவாதிகள் என்ற பெயரில் முஸ்லீம்களை விரட்டி விரட்டி எண்கவுண்டர் செய்துள்ளது வெட்ட வெளிச்சமாகியுள்ளது. இந்த வழக்கில் வன்சாரா உள்பட 3 ஐபிஎஸ் அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
முதலில் இந்த அதிகாரிகளைக் காக்க முயன்றார் மோடி. ஆனால், சிபிஐ விசாரணை வரும் என்ற நிலை உருவானதால், தனது மாநில சிஐடி விசாரணைக்கு உத்தரவிட்டார்.
இந்த விசாரணையின் அதிகாரியாக இருந்த சிஐடி பிரிவு டிஐஜியான ரஜனீஷ் ராய் அனைத்து விவரங்களையும் புட்டுப் புட்டு வைத்துவிட்டார்.
சொராபுதீன் ஷேக் என்பவரையும், அவரது மனைவி கெளசர் பீபியையும் பஸ்சில் இருந்து கடத்திச் சென்ற வன்சாரா தலைமையிலான போலீஸ் படை ஷேக்கை சுட்டுக் கொன்றது. இந்தக் கொலையை நேரில் பார்த்து விட்ட துள்சிராம் பிரஜாபதியும் சுட்டுக் கொன்றனர்.
அதைவிடக் கொடுமையாக ஷேக்கின் மனைவி கெளசர் பீபியை இரண்டு பண்ணை வீடுகளில் (இதில் ஒரு பண்ணை வீடு பாஜக எம்எல்ஏவுக்கு சொந்தமானது)வைத்து கற்பழித்து, கொலை செய்து உடலை எரித்து சாம்பலை தோட்டத்தில் விசிறியடித்துவிட்டனர்.
இந்த விவகாரங்களை வெளியில் கொண்டு வந்த டிஐஜி ரஜனீஷ் ராயை மாற்றிவிட்டார் நரேந்திர மோடி. இதனால் இந்த வழக்கில் இனிமேல் மேற்கொண்டு உண்மைகள் வெளியில் வர வாய்ப்பில்லை என்பதால் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரணைக்கு ஏற்ற நீதிபதிகள் தருண் சாட்டர்ஜி பாலசுப்பிரமணியம் ஆகியோர் இரு வாரத்துக்குள் இந்த மனுவுக்கு பதிலளிக்குமாறு குஜராத் போலீசாருக்கு உத்தரவிட்டனர்.
இந்த சொராபுதீன் ஷேக் கிரனைட் கல் ஏற்றுமதியாளர்களை மிரட்டி பணம் பறித்து வந்ததாக போலீசார் குற்றம் சாட்டியுள்ளனர். எனவே அவரைக் கொல்ல வன்சாரா அண்ட் கோவுக்கு கிரனைட் ஏற்றுமதி கும்பல் தான் பணம் தந்திருக்க வேண்டும் என்று தெரிகிறது.
அவர்களிடம் பணம் வாங்கிய வன்சாரா, சொராபுதீனை பயங்கர தீவிரவாதியாக சித்தரித்து காலி செய்துள்ளார். இதில் மன்னிக்க முடியாத விஷயம் அவரது மனைவியான அப்பாவி கெளசர் பீபியையும் கற்பழித்து கொலை செய்தது தான்.
-
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
90, 60, 55, 25: தமிழகத்தின் அடுத்த முதல்வர் இவர்தான்? 2 துணை முதல்வர்கள் யார்? பலே பாஜக.. அப்ப விஜய் -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க -
பாஜக - தவெக கூட்டணி உருவாகிறதா? திமுகவை வீழ்த்த பம்பர் ஆஃபர் 60 சீட், மெகா பொறுப்பு? டெல்லி பலே மூவ் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
"இந்த" 2 பேருக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்.. டி20 உலக கோப்பை வெற்றிக்கு பின் கம்பீர் சொன்ன வார்த்தை -
கருணாஸ் பாஜகவுக்கு விட்ட சவால்.. "இந்து மதமே கிடையாது" அதிர்ச்சியில் உறைந்த இந்து முன்னணி! -
நாலாபக்கமும் நெருக்கடி.. பாஜக கூட்டணிக்கு வருகிறாரா விஜய்? நயினார் நாகேந்திரனே கொடுத்த பதில்












Click it and Unblock the Notifications