கொழுப்பில் ராணுவம் திடீர் போர் ஒத்திகை:பீதியில் அலறிய மக்கள்
கொழுப்பு:கொழுப்பில் விடுதலைப் புலிகளின் தாக்குதல் நடத்தினால் அதை சமாளிக்க இலங்கை ராணுவம் போர் ஒத்திகை நடத்தியது. இதனால் தாக்குதல் தொடங்கிவிட்டதாக நினைத்து மக்கள் பீதியடைந்து ஓடினர்.
விடுதலைப் புலிகள் சமீபகாலமாக கொழும்பு, பலாலி விமான தங்களை விமானங்களைக் கொண்டு தாக்க ஆரம்பித்துள்ளனர். இந்த தாக்குதலை புலிகள் விரிவுபடுத்தலாம், கொழும்பின் பிற பகுதிகளையும் தாக்கலாம் என்று அரசு கருதுகிறது.
இதையடுத்து அப்படிப்பட்ட தாக்குதல் நடந்தால் அதை சமாளிக்கும் வகையில் ராணுவம் தயாராகி வருகிறது. இதற்காக இலங்கை ராணுவம் கொழும்பு துறைமுகம் அருகே போர் ஒத்திகை நடத்தியது. இதுகுறித்து பொது மக்களுக்கு எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை.
திடீரென துப்பாக்கி, பீரங்கிகள் வெடிக்கும் சத்தங்கள் கேட்டவுடன் விடுதலைப் புலிகள் தான் நகருக்குள் புகுந்து தாக்குதல் நடத்துவதாக பீதி ஏற்பட்டது. பதட்டமடைந்த மக்கள் சிதறி ஓடினர்.
இதையடுத்து போர் எதுவும் நடக்கவில்லை, ஒத்திகை தான் நடக்கிறது என டிவி மற்றும் ரேடியோ மூலம் ராணுவம் அறிவிப்பை வெளியிட்டது.












Click it and Unblock the Notifications