ஊட்டியில் பின்னியெடுத்த பனிக்கட்டி மழை:நீரில் மூழ்கிய பொட்டானிகல் கார்டன்
ஊட்டி:ஊட்டி உள்பட நீலகிரி மாவட்டத்தின் பல பகுதிகளிலும் திடீரென கன மழை பெய்தது. இதில் ஊட்டி தாவரவியல் பூங்கா நீரில் மூழ்கிப் போனது.
தமிழகத்தை வெயில் வாட்டோ வாட்டு என வாட்டி வரும் நிலையில் பலரும் ஊட்டி, கொடைக்கானல் பக்கமாக ஓட ஆரம்பித்துள்ளனர். ஆனால், அங்கும் வரலாறு காணாத வெயில் மண்டையை பிளந்ததால் சுற்றுலா பயணிகளுக்கு எரிச்சலே மிஞ்சியது.
![]() |
இந் நிலையில் கடந்த இரு தினங்களாக ஊட்டியில் மழை பெய்ய ஆரம்பித்துள்ளது. நேற்று முன் தினம் கன மழை பெய்தது. அதே போல நேற்று காலையும் மழை பின்னி எடுத்தது.
பல இடங்களில் பனிக் கட்டியுடன் மழை பெய்தது.
கன மழையால் காந்தல், குருசடி ஆகிய பகுதிகளில் உள்ள கால்வாய் நிறைந்து நீர் அருகில் உள்ள வீடுகளுக்குள் புகுந்தது.
பொட்டானிக்கல் கார்டன், சிறுவர் பூங்கா, பஸ் ஸ்டாண்ட் ஆகியவை தெப்ப குளங்களாகின. அதே போல சாலைகளிலும் ஆங்காங்கே மண்ணரிப்பு ஏற்பட்டது.
இதனால் சுற்றுலா வந்தவர்களின் வாகனங்கள் பெரும் சிரமத்துக்குள்ளாக நேர்ந்தது. சுற்றுலா வந்தவர்களும் பூங்காக்களை சுற்றிப் பார்க்க முடியாமல் திரும்ப வேண்டிய நிலை ஏற்பட்டது.













Click it and Unblock the Notifications