திண்டுக்கல்-பஸ் கிணற்றில் விழுந்து 3 பேர் பலி

Subscribe to Oneindia Tamil

திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே பேருந்து கிணற்றுக்குள் விழுந்ததில் 3 பயணிகள் உயிரிழந்தனர். 35 பேர் படுகாயம் அடைந்தனர்.

மதுரையிலிருந்து கோவைக்கு சென்று கொண்டிருந்த அந்த அரசுப் பேருந்தில் 60க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். பேருந்து பழனி சாலையில் செம்பட்டி அருகே சென்று கொண்டிருந்தபோது பஸ்சின் வலது பக்க முன் டயர் திடீரென வெடித்தது.


இதனால் நிலைதடுமாறிய பஸ் சாலையைவிட்டு விலகி வயல் வெளியில் இருந்த 40 அடி ஆழ கிணற்றுக்குள் தலைகுப்புற கவிழ்ந்தது.

இதையடுத்து அப் பகுதியில் இருந்தவர்கள் ஓடி வந்து பயணிகளை காப்பாற்ற முயன்றனர். இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸாரும், தீயணைப்பு படையினரும் விரைந்து வந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர்.

இந்த விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலே உயிரிழந்தனர். மேலும் 35 பேர் படுகாயம் அடைந்தனர். படுகாயமடைந்த அனைவரும் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

கிணற்றுக்குள் கவிழ்ந்த பேருந்தை கிரேன் மூலம் மீட்க முயற்சி நடக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+