கொழும்பு விமான நிலையத்தை3 மாதங்களுக்கு இரவில் மூட முடிவு
கொழும்பு:விடுதலைப் புலிகளின் விமானத் தாக்குதலை தொடர்ந்து கொழும்பு சர்வதேச விமான நிலையத்தை 3 மாதங்களுக்கு இரவு நேரத்தில் மூடி வைக்க இலங்கை அரசு முடிவு செய்துள்ளது.
விடுதலைப் புலிகளின் வான் புலிகள் பிரிவு இதுவரை மூன்று முறை விமானத் தாக்குதலை நடத்தியுள்து. இதை சமாளிக்க முடியாமல் இளங்கை படைகள் தவித்து வருகின்றன.
விடுதலைப் புலிகளின் விமானத் தாக்குதலால் பல விமான நிறுவனங்கள், இரவு நேரத்தில் தங்களது சேவையை நடத்தாமல் நிறுத்தி வைத்துள்ளன. இதனால் பயணிகள் பெரும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.
இந்த நிலையில் கொழும்பு சர்வதேச விமான நிலையத்தை 3 மாதங்களுக்கு இரவு நேரத்தில் மூடி வைக்க இலங்கை அரசு திட்டமிட்டுள்ளது. வருகிற 10 ம் தேதி முதல் மூன்று மாதங்களுக்கு இரவு நேரத்தில் கொழும்பு விமான நிலையம் மூடப்பட்டிருக்கும்.
அதேபோல கட்டுநாயகே விமானப்படைத் தளமும் இரவு நேரத்தில் செயல்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, இலங்கையில் மனித உரிமை மீறல் நாளுக்கு நாள் பெருகி வருவதால் அந்நாட்டுக்கான நிதியுதவியை இங்கிலாந்து அரசு நிறுத்த உத்தரவிட்டுள்ளது.
அப்பாவிகள் பலியாவது, ஆள் கடத்தல், கற்பழிப்பு, தமிழர் பகுதியில் நடத்தப்படும் சரமாரித் தாக்குதல் உள்ளிட்ட மனித உரிமை மீறல் செயல்களைத் தடுக்க இலங்கை அரசு உரிய நடவடிக்ைக எடுக்கவில்லை. எனவே இலங்கைக்கான கடன்உதவியை நிறுத்தி வைக்க அரசு முடிவு செய்துள்ளதாக இங்கிலாந்து சர்வதேச மேம்பாட்டுத் துறை அமைச்சர் தாமஸ் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
இலங்கைக்கு ரூ. 28 கோடி நிதியுதவியை அளிக்க இங்கிலாந்து முடிவு செய்திருந்தது. அதில் பாதித் ெதாகை ஏற்கனவே வழங்கப்பட்டு விட்டது. மீதத் ெதாகையைத்தான் தற்ேபாது நிறுத்தி வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications