For Daily Alerts
Just In
காஞ்சிபுரம் கார்-வேன் மோதலில் 3 பேர் பலி
காஞ்சிபுரம்:காஞ்சிபுரத்தில் நின்றிருந்த வேன் மீது கார் மோதியதில், காரில் பயணம் செய்த 3 பேர் பலியானார்கள். வேனில் இருந்த 16 பேர் காயம் அடைந்தனர்.
சென்னை திருவான்மையூரை சேர்ந்த ஆம்னி மேத்யூ (65), அவரது மகன் அனிஷ் ஆபிரகாம் (30), சகோதரி மகன் கிர்கிரி (4) ஆகியோர் வேலூரியிலிருந்து சென்னைக்கு சென்று கொண்டிருந்தனர்.
அப்போது காஞ்சிபுரம் அருகே சாலையில் நின்று கொண்டிருந்த வேன் மீது கார் பயங்கரமாக மோதியது. இதில் காரில் பயணம் செய்த 3 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தனர்.
வேனில் இருந்த 16 பெண்களும் காயம் அடைந்தனர். இவர்கள் கூலி வேலைக்கு செல்லும்போது இந்த விபத்தில் சிக்கினர்.
காயமடைந்தவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
Comments
காயம் கார் மோதல் போலீஸ் car காஞ்சிபுரம் hospital மருத்துவமனை வேலூர் enquiry van வேன் kanchipuram tamil news
Story first published: Tuesday, May 8, 2007, 5:30 [IST]