வீட்டிலிருந்தபடியே பஸ்ஸை பாலோ செய்யலாம்
சென்னை:சென்னை நகரில் ஓடும் அரசுப் பேருந்துகள் எந்த இடத்தில் வந்து கொண்டுள்ளது என்பதை வீட்டிலிருந்தபடியே அறிந்து கொள்ளும் நவீன வசதியை மாநகரப் போக்குவரத்துக் கழகம் அறிமுகப்படுத்தவுள்ளது.
ஜிபிஎஸ் தொழில்நுட்பம் மூலம் வாகனங்களின் நடமாட்டத்தை செயற்கைக்கோள் மூலம் அறியும் வசதி பல தனியார் வாகனங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் சேலம், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் சரக்கு லாரிகள், தனியார் பேருந்துகளில் இந்த வசதி அமல்படுத்தப்பட்டுள்ளது. தற்போது இந்த வசதி சென்னை மாநகரப் பேருந்துகளில் அமல்படுத்தப்படவுள்ளது.
மத்திய அரசின் ரூ.3 கோடி நிதியுதவியுடன் இது நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. மாநகர போக்குவரத்துக் கழகத்தில் உள்ள 2000 பேருந்துகளில் இது அமல்படுத்தப்படுகிறது.
இதன்படி அனைத்துப் பேருந்துகளிலும் சென்சார் கருவிகள் பொருத்தப்படும். பின்னர் இவை செயற்கைக்கோள் மூலமாக போக்குவரத்துக் கழக கட்டுப்பாட்டு அறையுடன் இணைக்கப்படும்.
இதன் மூலம் சம்பந்தப்பட்ட பேருந்து எங்கு சென்று கொண்டிருக்கிறது என்பது கட்டுப்பாட்டு அறையில் உள்ள கம்ப்யூட்டர்கள் மூலம் கண்காணிக்க முடியும். மேலும் சம்பந்தப்பட்ட பேருந்தின் ஓட்டுநருடன் பேசுவதற்கான வசதியும் இதில் உள்ளது.
பேருந்துகளின் நடமாட்டம் குறித்த தகவல்கள் இணையதளத்திலும் இடம் பெறச் செய்யப்படும். அதன் மூலம் பொதுமக்கள் தங்களது இருப்பிடங்களிலிருந்தே தாங்கள் போக வேண்டிய பேருந்து தற்போது எந்த இடத்தில் வந்து கொண்டிருக்கிறது என்பதை அறிய முடியும். அதை வைத்து தங்களது பயண நேரத்தை திட்டமிட முடியும்.
-
சிலிண்டர் வரலை! ஆப்பம்லாம் பிறகு பார்ப்போம்! Variety rice கிடையாது! சென்னை ஆனந்தா ஹோட்டல் அறிவிப்பு -
கிண்டி மேம்பாலத்தில் கைமாறிய 1.5 கிலோ தங்கம்.. சென்னை ஜிஎஸ்டி ஆபீசர் யாருனு பார்த்தால்? செம ட்விஸ்ட் -
கூடுவாஞ்சேரியில் நள்ளிரவில் நடந்த தீவிபத்து! ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் உடல் கருகி பலி! -
சென்னை மொத்தமாக முடங்கியது.. சிலிண்டர் இல்லாமல் அடுத்தடுத்து மூடப்படும் உணவகங்கள். தவிக்கும் மக்கள் -
கேஸ் சிலிண்டர் தமிழகத்தில் பதிய 25 நாள்.. எரியாத எல்பிஜி அடுப்புகள்.. மதுரை வெங்கடேசன் உடைத்த உண்மை -
LPG: தமிழகத்தில் 20 நாட்களுக்கு தேவையான எல்பிஜி சிலிண்டர் இருப்பு! மத்திய அரசுக்கு கடிதம் -
பாஜக விரிக்கும் '60 சீட்' வலை.. விஜயுடன் டெல்லி கடைசி கட்டப் பேச்சுவார்த்தை.. உறுதியாகும் கூட்டணி? -
தமிழகத்திலிருந்து ராஜ்யசபா தேர்தலில் போட்டியிட்ட 6 பேரும்.. போட்டியின்றி தேர்வு! -
செஸ் உலகில்.. மிகப்பெரிய சாதனை செய்த தமிழக சிறுவன்! 9 வயசுல இதை செய்யுறது பெரிய விஷயம்! -
கோடிக்கணக்கில் சொத்து சேர்த்தாலும் சிக்கல் வராது.. ஆனால் இந்த ஒரு விஷயத்தை மட்டும் மறக்காதீங்க! -
அரசு துறையில் அலுவலக உதவியாளர் வேலை.. சென்னையிலேயே பணியிடம்.. 10 ஆம் வகுப்பு தகுதி தான்! விட்றாதீங்க -
வேலூரில் 100 டிகிரியை தொட்ட வெயில்.. பாலாறு உருகிடுச்சி! மக்கள் பாதிப்பு!











Click it and Unblock the Notifications