For Quick Alerts
For Daily Alerts
Just In
மதுரை, திருச்சியில் காலடி வைக்கும் டிசிஎஸ்
திருச்சி:மதுரை, திருச்சி உள்ளிட்ட நகர்களில் கிளைகளைத் தொடங்க டிசிஎஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து டிசிஎஸ் நிறுவனத்தின் தலைமை திட்ட மற்றும் செயல் மேலாளர் கார்த்திகேயன் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
டிசிஎஸ் நிறுவனம் இந்த ஆண்டில் 32,000 பேரை பணியில் சேர்க்கவுள்ளது.
சென்னை அருகே சிறுசேரியில் உருவாக்கப்பட்டு வரும் டிசிஎஸ் சாப்ட்வேர் பார்க் 2010ம் ஆண்டிற்குள் 6 கட்டமாக செயல்படுத்தப்படும். சிறுசேரியில் மட்டும் 22,000 பேர் பணியமர்த்தப்படுவர்.
சென்னை, கொச்சி, கோவை, சண்டீகரில் எங்கள் நிறுவனம் பெரிய அளவில் விரிவாக்கப்படவுள்ளது. அடுத்ததாக திருச்சி, மதுரையிலும் கிளைகளைத் தொடங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.
அதேபோல ஒரிஸ்ஸா தலைநகர் புவனேஸ்வரில் டிசிஎஸ் பயிற்சி மையம் அமைக்கப்படவுள்ளது என்றார் கார்த்திகேயன்.
Comments
chennai சென்னை tamil nadu post முடிவு thatstamil tamilnadu tamil news local body election recruit tn political breaking கணினி
Story first published: Tuesday, May 8, 2007, 5:30 [IST]