பெரியாறு அணை கைப்பிடிச்சுவர் மீண்டும் சேதம்!:கேரளாவின் உள்குத்து!!
கூடலூர்:பெரியாறு அணையின் கைப்பிடிச்சுவர் 15 அடி நீளத்துக்கு சேதப்படுத்தப்பட்டுள்ளது.
முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த உச்சநீதிமன்றம் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் உத்தரவிட்டது. ஆனால் உச்சநீதிமன்றத்தில் உத்தரவை அமல்படுத்த கேரள அரசு மறுத்த வருகிறது.
மேலும் அணை பலவீனமாக இருப்பதாக கூறி பல்வேறு மாநிலங்களை சேர்ந்த நிபுணர் குழுவை அழைத்து வந்து அணைப்பகுதியில் அடிக்கடி கேரள அரசு செய்து வருகிறது. அப்போதெல்லாம் தமிழக அதிகாாிகளை மிரட்டுவதையும் மலையாளிகள் ஒரு வேலையாக செய்து வருகின்றனர்.
இந்நிலையில் தமிழக அரசு கடந்த வாரம் பெரியாறு அணைக்கு நிபுணர் குழுவை அனுப்பி ஆய்வு செய்தது. இதற்கு பதில் நடவடிக்கையாக கேரள அணைகள் பாதுகாப்பு குழுவின் தலைவர் சசிதரன் தலைமையிலான குழு ஒன்று நேற்று முன்தினம் அணைக்கு சென்று பார்வையிட்டது.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அணையின் கைப்பிடி சுவர் மர்ம நபர்களால் சேதப்படுத்தப்பட்டது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அணை பலவீனமாக உள்ளதாக வெளியுலகுக்குக் காட்ட கேரளாவே இந்த அசிங்க வேலையை செய்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் பெரியாறு அணையின் கைப்பிடிச்சுவர் மீண்டும் சேதப்படுத்தப்பட்டுள்ளது. பெரியாறு அணைப்பகுதி முழுவதும் தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இருந்த போதும், பாதுகாப்பு பணியில் கேரளா போலீசார் 30 பேர் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த ஆண்டு டிசம்பரில் கைப்பிடிச்சுவர் சேதப்படுத்தப்பட்ட சம்பவத்திற்கு பின் கடந்த 6 மாதங்களாக தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகளும், கேரள போலீசாரும் அணைப் பகுதிக்குள் யாரையும் செல்ல அனுமதிக்கவில்லை.
இந்நிலையில் அணையின் கைப்பிடிச் சுவர் திடீரென 15 அடி நீளம், 2 அடி அகலத்துக்கு சேதம் ஏற்பட்டுள்ளது. கேரள அணை பாதுகாப்பு குழுவினர் நேற்று முன்தினம் அணைக்கு சென்று வந்த பிறகு இது நடைபெற்றுள்ளதால். இதை கேரள போலீசாரே செய்திருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது.
இதனால் அணை பலமிழந்து விட்டதாக பிரசாரம் செய்து, தமிழகத்துக்கு புதிய சிக்கலை ஏற்படுத்த கேரளம் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
-
“நவோதயா பள்ளிகளை தமிழகத்தில் அனுமதிக்க முடியாது.. அது இல்லாமலோயே கல்வி சிறப்பாக உள்ளது” - தமிழக அரசு -
எல்பிஜி கேஸ் சிலிண்டர் தமிழகத்தில் பதிய 25 நாள்களா? எரியாத ஸ்டவ்கள்.. மதுரை வெங்கடேசன் உடைத்த உண்மை -
இது கோடைக்காலம் இல்லை.. கோடை மழைக்காலம்! ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
28 நாட்கள் கழித்துதான் கேஸ் சிலிண்டர் வருமா? இதென்ன கணக்கு! இட்லி, தோசைக்கு தமிழகத்தில் டிமாண்டு? -
கொரோனா லாக்-டவுன் மாதிரி ஆயிடுச்சு.. இட்லியில் கை வைத்த இஸ்ரேல்! சிலிண்டர் சிக்கல் எப்போது தீரும்? -
உஷரய்யா உஷாரு.. பீகாரை வைத்து தமிழ்நாட்டில் பாஜக போடும் கணக்கு! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
EXCLUSIVE: வட இந்தியர்களுக்கு வேலையில்லை.. இனி இட்லி, சப்பாத்தி மட்டும் தான்! குமுறும் ஓட்டல் உரிமையாளர்கள்.! -
LPG: தமிழகத்தில் 20 நாட்களுக்கு தேவையான எல்பிஜி சிலிண்டர் இருப்பு! மத்திய அரசுக்கு கடிதம் -
கண்ணீருடன் தீர்ப்பு சொன்ன உச்சநீதிமன்ற நீதிபதி.. இளைஞரை கருணை கொலை செய்ய அனுமதித்தபோது உருக்கம் -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா?












Click it and Unblock the Notifications