தூத்துக்குடி: பஸ்-வேன் மோதலில் 8 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
தூத்துக்குடி:தூத்துக்குடி அருகே நடந்த சாலை விபத்தில் 8 பேர் கொல்லப்பட்டனர். 3 பேர் படுகாயமடைந்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் சபலாலப் பேரி என்ற இடத்தில் ஒரு அரசுப் பேருந்து வந்து கொண்டிருந்தது. எதிர் திசையில், வேன் ஒன்று வந்து கொண்டிருந்தது.
நெல்லை-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் இந்த வாகனங்கள் வந்தபோது நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இதில், 4 பெண்கள், 2 குழந்தைள் உள்பட 8 பேர் சம்பவ இடத்திலேயே பலியாயினர்.
3 பேர் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்கள் கோவில்பட்டி, நெல்லை அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.
விபத்தில் இறந்தவர்கள், யார் என்ற விவரம் தெரியவில்லை. போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications