For Daily Alerts
Just In
தூத்துக்குடி: பஸ்-வேன் மோதலில் 8 பேர் பலி
தூத்துக்குடி:தூத்துக்குடி அருகே நடந்த சாலை விபத்தில் 8 பேர் கொல்லப்பட்டனர். 3 பேர் படுகாயமடைந்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் சபலாலப் பேரி என்ற இடத்தில் ஒரு அரசுப் பேருந்து வந்து கொண்டிருந்தது. எதிர் திசையில், வேன் ஒன்று வந்து கொண்டிருந்தது.
நெல்லை-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் இந்த வாகனங்கள் வந்தபோது நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இதில், 4 பெண்கள், 2 குழந்தைள் உள்பட 8 பேர் சம்பவ இடத்திலேயே பலியாயினர்.
3 பேர் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்கள் கோவில்பட்டி, நெல்லை அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.
விபத்தில் இறந்தவர்கள், யார் என்ற விவரம் தெரியவில்லை. போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Comments
நெல்லை மதுரை tamil nadu தூத்துக்குடி பலி மோதல் பேருந்து thatstamil killed hospital மருத்துவமனை சாலை விபத்து road accident van வேன் injury tamil news thuthukudi
Story first published: Thursday, May 10, 2007, 5:30 [IST]