6 சீர்காழி மீனவர்கள் மாயம்
Subscribe to Oneindia Tamil
சீர்காழி: நாகை மாவட்டம் சீர்காழியைச் சேர்ந்த 6 மீனவர்கள் 4 நாட்களாகியும் கரை திரும்பாததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சீர்காழி அருகே திருமுல்லைவாயில் என்ற ஊரைச் சேர்ந்த ஜெயபிரகாஷ்(30), ஜெய்கணேஷ் (25), இளவேந்தன் (18), முத்து (32), ராஜேந்திரன் (55) ஆகிய 6 மீன்வர்கள் மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர்.
இதுவரை இவர்கள் கரைக்கு திரும்பவில்லை. இது குறித்து திருமுல்லைவாயில் கிராம தலைவர் பரந்தாமன், போலீஸில் புகார் கொடுத்தார். இதையடுத்து போலீஸார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். கடலோர காவல்படையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications